×
 

துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி!!

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்தை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்.பி. கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027 ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் அதிமுக போன்ற அடிமைத் துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பாஜக முன் மண்டியிட்டாலும், திமுக-வின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும்.

நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்னும் வராத ஒன்றை 'புலி வருது, புலி வருது' என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத்தான் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் என்று விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: புரோக்கர் வேலை திமுக IT WING-ன் குலத்தொழில் போல! அதிமுக சரமாரி சாடல்..

இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தங்கள் சொந்த மாநில நலன்களை கைவிட்டு, தனிப்பட்ட அரசியல் பிழைப்புக்காக டெல்லி எஜமானர்களுக்கு பணிந்து நடப்பவர்கள், எங்களுக்கு போதனை செய்ய உரிமை இல்லை. தமிழ்நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை, நமது விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை நீங்கள் பாதுகாக்கிறீர்கள்.

அச்சுறுத்தல் எங்கள் வீட்டு வாசல் வரை வந்துவிட்டது. உங்கள் டெல்லி எஜமானர்களிடம் அவர்களின் பொய்கள் தமிழ்நாட்டில் வேலை செய்யாது என்று சொல்லுங்கள். எழுதப்பட்ட, தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு தீர்வைத் தவிர வேறு எதையும் நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம், அரசியலமைப்பு உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை குரல் எழுப்புவோம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #ராஜ்யசபா தேர்தல்: EPS முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share