×
 

எதே...?! - திமுக தேர்தல் அறிக்கை அதிமுகவோட காபியா?... இபிஎஸுக்கு பொட்டில் அடித்தாற் போல் பதிலடி கொடுத்த கனிமொழி...!

அதிமுக தேர்தல் அறிக்கையை நான் படித்துக் கூட பார்க்கவில்லை இபிஎஸ்க்கு கனிமொழி கருணாநிதி எம்பி பதிலடி

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெறும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கனிமொழி கருணாநிதி எம்பி வந்தார். பாளையங்கோட்டை சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் அப்துல் வகாப்பை அறிமுகம் செய்தார். 

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி பேசியதாவது: முதல் கூட்டத்திலேயே வாழ்த்துக்களை தெரிவிக்கக்கூடிய கூட்டணி நம்முடைய கூட்டணி.அப்துல் வகாப் இந்த பாளையங்கோட்டை தொகுதியின் செல்லப்பிள்ளை மக்களுக்காக ஓடோடி வருபவர்.

தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.அடுத்த முறையும் நம் கட்சி ஆட்சிக் கட்டிலில் வந்தால் தான் முன்னேற்றம் தொடரும் என மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். மீடியாக்கள் அவரவர் இஷ்டத்திற்கு ஆருடம் கூறுகிறார்கள்.சூழ்ச்சிகளை எல்லாம் முறியடிக்க கூடியவர்கள் நாம்முடைய கூட்டணிதான்.

இதையும் படிங்க: “உனக்கே உன் மேல நம்பிக்கை இல்ல...” - விஜயை வெளுத்து வாங்கிய சீமான்... அண்ணாமலை, இபிஎஸுக்கும் அதிரடி ரிப்ளே...!

ஒரு கூட்டணியில் பல இயக்கங்கள் இருக்கிறது. திமுகவில் தங்களுக்கான வேட்பாளர்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்று அதிகமாக போராடுவோம். காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அவர்கள் இயக்கத்திற்காக அவர்கள் தொகுதிக்காக போராடுவார்கள். தேமுதிகவை எடுத்துக் கொண்டாலும், விடுதலை சிறுத்தைகளை எடுத்துக்கொண்டாலும் அதேதான்.தனக்கு என்ன வேண்டும் என்பதை தங்களது குடும்பத்தில் இருப்பவர்கள் அதை பாசத்தோடு பெற்றுக்கொள்வோம்.

அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கை குறித்து கூறுகிறார் எங்களது தேர்தல் அறிக்கையை பார்த்து காப்பி அடித்து விட்டார்கள் என்று. உண்மையில் சொன்னால் அதை தேர்தல் அறிக்கையை நான் படிக்க கூட இல்லை.

திமுக தேர்தல் அறிக்கையை கேட்டால் யார் வேண்டுமானாலும் கூறுவார்கள். ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கை பற்றி கேட்டால் யாருக்கும் தெரியாது.திமுக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறதோ அதை செய்து தரப்படும் என்று மக்களுக்கு தெரியும். நாட்டை காப்பாற்றும் கூட்டணி நம்முடைய கூட்டணி.ஒன்றியத்தில் இருப்பவர்களை எதிர்த்துப் போராடும் நம்முடைய கூட்டணி.

மாநில உரிமைகளை பறிக்கும் பொழுது மக்களுடைய உரிமைகளை பறிக்கும் பொழுது நம்முடைய மொழியை சிதைக்க நினைக்கும் பொழுதும் அதற்காக ஒன்றாக இணைந்து வாதாடக்கூடிய கூட்டணி நம்முடைய கூட்டணி என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்.

இந்த தேர்தல் வெற்றி என்பது தமிழ்நாடு தேர்தல் வெற்றி மட்டும் இல்லை. இந்த நாட்டில் ஆளக்கூடிய எத்தனையோ மாநிலங்களுக்கும் நம்மாலும் வெற்றி பெற முடியும் என்று எடுத்துக்காட்டுவது.நம்பிக்கையை நாம் உருவாக்கி காட்ட வேண்டும். இங்கிருப்பவர்கள் அத்தனை பேரும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்.அனைவரும் வெற்றிக்காக பாடுபட வேண்டும் வெற்றி நிச்சயம் என்று கூறினார்.

இதையும் படிங்க: இபிஎஸ் முதல்வர் ஆகக்கூடாது...கட்சிக்குள் உள்ளடி வேலை பார்க்கும் முன்னாள் அமைச்சர்... அதிமுக முன்னாள் மா.செ. பரபரப்பு குற்றச்சாட்டு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share