×
 

கர்நாடகாவில் ஆரம்பிக்கும் தலைமை மோதல்!! துணை முதல்வர் பதவி கேட்டு அரசியல் வாரிசுகள் போட்டி!

கர்நாடகாவில் மூத்த தலைவர்களுக்குள் இல்லாமல், அவர்களது வாரிசுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கர்நாடக அரசியலில் புதிய திருப்பமாக, புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்க உள்ள நிலையில், துணை முதல்வர் பதவிக்கான போட்டி காங்கிரஸ் கட்சிக்குள் தீவிரமடைந்துள்ளது. மூத்த தலைவர்களுக்கிடையேயான அதிகாரப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், தற்போது அவர்களது அரசியல் வாரிசுகளுக்கு இடையே புதிய அதிகாரப் போட்டி உருவாகியுள்ளது.

நீண்ட காலமாக கர்நாடக காங்கிரஸில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் அணிகளுக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகளுக்கு கட்சியின் மேலிடம் சமரச தீர்வை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, மாநிலத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் இன்று பதவியேற்க உள்ளார். ஆனால் அதே நேரத்தில், துணை முதல்வர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி கட்சிக்குள் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்தப் போட்டியில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா மற்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே ஆகியோர் முக்கிய பெயர்களாக பேசப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கர்நாடக முதல்வராக ஜூன் 3ல் பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார்!! உறுதி செய்தது காங்.,!

2018-ஆம் ஆண்டு தேர்தல் அரசியலில் அறிமுகமான யதீந்திரா, பின்னர் சட்ட மேல்சபை உறுப்பினராகவும் பொறுப்பேற்றார். கட்சியின் அமைப்பு பணிகளிலும், தந்தையின் அரசியல் நடவடிக்கைகளிலும் முக்கிய பங்காற்றி வந்ததால், அவருக்கு உயர்ந்த பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மறுபுறம், பிரியங்க் கார்கே ஏற்கனவே தனக்கென ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், தகவல் தொழில்நுட்பம், ஊரக வளர்ச்சி மற்றும் சமூக நலன் உள்ளிட்ட முக்கிய துறைகளில் அமைச்சராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மாநில அரசியலில் தனி செல்வாக்கையும் பெற்றுள்ளார்.

மேலும், துணை முதல்வர் பதவி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தும் காங்கிரஸ் வட்டாரங்களில் வலுவாக பேசப்படுகிறது. அந்த அடிப்படையில் பிரியங்க் கார்கேவின் பெயர் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில், சித்தராமையா அணியின் அதிருப்தியை ஏற்படுத்த விரும்பாத காங்கிரஸ் மேலிடம், இருவருக்கும் முக்கிய பொறுப்புகளை வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட துணை முதல்வர் பதவிகள் உருவாக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது கர்நாடக காங்கிரஸ் அரசியலின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகாவுக்கு 4 துணை முதல்வர்கள்?! சித்தராமைய்யா மகனுக்கு முக்கிய பதவி? சிவக்குமார் அமைச்சரவையில் ட்விஸ்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share