×
 

ரூ.200 கோடி சொத்தை மறைத்த பாஜக வேட்பாளர்!! வேட்புமனுவில் வெளியான உண்மை! வெளுத்து வாங்கும் காங்.,!

கேரள மாநில பா.ஜ., தலைவரும் நேமம் தொகுதி வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக மாநிலத்தில் உள்ள 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்தை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக காங்., குற்றஞ்சாட்டியுள்ளது.

கேரளாவில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவரும் நேமம் தொகுதி வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர் மீது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. 

காங்கிரஸ் கட்சி, அவருக்கு சொந்தமான கர்நாடகாவின் பெங்களூரு கோரமங்கலா பகுதியில் உள்ள 49,000 சதுர அடி பிரமாண்ட பங்களாவை (மதிப்பு 200 கோடி ரூபாய்க்கு மேல்) வேண்டுமென்றே மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்ததாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி குற்றஞ்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் கடிதத்தில், “ராஜீவ் சந்திரசேகர் கடந்த சட்டசபை தேர்தலின்போது இதே முகவரியை பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த முறை அந்த 200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து விவரத்தை முழுமையாக மறைத்துவிட்டார்.

இதையும் படிங்க: காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கும் மோடி!! ராகுல்காந்திக்கு பெரும் சவால்!! பிரதமர் கேரள பயணத்தில் ட்விஸ்ட்!

இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரான குற்றம்” எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த சொத்துக்கான வரியை வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் (மார்ச் 17) அவர் செலுத்தியிருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் ராஜீவ் சந்திரசேகரை தேர்தலில் போட்டியிடும் தகுதியிலிருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

இதேவேளையில், தேர்தல் ஆணையம் கேரள பாஜகவுக்கு அனுப்பிய கடிதத்தில் தேர்தல் ஆணையத்தின் முத்திரைக்கு பதிலாக பாஜக மாநில அலுவலக முத்திரை பயன்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக கண்டித்துள்ளன. தேர்தல் ஆணையம் இதை “எழுத்துப் பிழை மற்றும் அலுவலகத் தவறு” என விளக்கம் அளித்துள்ளது.

கேரள அரசியல் களம் இப்போது முழுமையாக சூடுபிடித்துள்ளது. பாஜக மாநிலத் தலைவர் மீதான இந்த சொத்து மறைப்பு குற்றச்சாட்டு, தேர்தல் பிரசாரத்துக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜீவ் சந்திரசேகர் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறும் நிலையில், இந்த சர்ச்சை கேரள தேர்தல் களத்தை இன்னும் பரபரப்பாக்கியுள்ளது. 

இதையும் படிங்க: ரன் வே-க்கு கீழே சுரங்கப்பாதை!! உலகத்திலேயே முதல்முறை!! அசத்தும் ஹைதராபாத் பேகம்பட் ஏர்ப்போர்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share