தமிழக பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு!
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றார். ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பதவியேற்றார். கேரள ஆளுநராக இருந்த அவர், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பை கூடுதலாக ஏற்றுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் (ராஜ்பவன்) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மதராஸ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களின் அறிவிப்பின்படி, சி.வி.ஆனந்த போஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டார். நேற்று காலை சென்னையிலிருந்து டெல்லி சென்ற அவர், பின்னர் கொல்கத்தா சென்று இன்று மேற்கு வங்க ஆளுநராக பதவியேற்றார்.
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்றிரவு சென்னை வந்தடைந்தார். இன்றைய பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, ரகுபதி, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!
#WATCH | Chennai | Rajendra Vishwanath Arlekar sworn in as Governor of Tamil Nadu. CM MK Stalin and other leaders present. pic.twitter.com/YWdjM1W9Tr
— ANI (@ANI) March 12, 2026
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தலைமைச் செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. அவர் ஆட்சியமைத்த தமிழ்நாடு அரசுடன் பல முறை மோதல்கள் ஏற்பட்டன. இப்போது அவர் மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டதால், தமிழ்நாட்டில் புதிய ஆளுநர் பொறுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாட்டை கவனிப்பார். இந்த மாற்றங்கள் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பு நடந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
ஆளுநர் மாளிகையில் நடந்த விழா சம்பிரதாயமாகவும், மரியாதையுடனும் நடைபெற்றது. புதிய பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தமிழ்நாட்டின் அரசியல், சமூக நிகழ்வுகளில் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழக கவர்னர் ஆர்.வி.லோகர்!! நாளை மறுநாள் சென்னை வருகை!! 12ம் தேதி பொறுப்பேற்பு!