×
 

தமிழக கவர்னர் ஆர்.வி.லோகர்!! நாளை மறுநாள் சென்னை வருகை!! 12ம் தேதி பொறுப்பேற்பு!

தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பேற்கும் ஆர்.வி.ஆர்லேகர் 12-ம் தேதி மதியம் 12 மணியளவில் பதவி ஏற்கிறார்.

சென்னை, மார்ச் 9: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கேரள கவர்னர் ஆர்.வி.ஆர்லேகர் தமிழக கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக ஏற்குமாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி, ஆர்.என்.ரவி தமிழக கவர்னர் பதவியிலிருந்து விடைபெறுகிறார். ஆர்.வி.ஆர்லேகர் நாளை மறுநாள் (மார்ச் 11) சென்னைக்கு வருகிறார். அதே நாளில் ஆர்.என்.ரவி பதவியிலிருந்து விடைபெறுகிறார்.

ராஜ்பவன் அதிகாரிகள், ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் ஆகியோர் ஆர்.என்.ரவியை மரியாதையுடன் வழியனுப்பி வைக்க உள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தமிழக கவர்னராக பதவியேற்ற ஆர்.என்.ரவி, கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் 6 மாதங்களுக்கும் மேலாக பதவியில் இருந்தார். அவரது பதவிக்காலத்தில் பல சர்ச்சைகள், அரசியல் மோதல்கள் எழுந்தன. குறிப்பாக திமுக அரசுடன் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டன.

இதையும் படிங்க: எலெக்‌ஷன் வேலை எக்கச்சக்கமா இருக்கே!! சம்மன் அனுப்பிய சிபிஐ! விலக்கு கேட்கும் விஜய்!

இந்நிலையில், கூடுதல் பொறுப்பேற்கும் ஆர்.வி.ஆர்லேகர் மார்ச் 12-ஆம் தேதி மதியம் 12 மணியளவில் தமிழக கவர்னராக பதவிப் பிரமாணம் செய்துகொள்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்வு எளிமையாக, சிறப்பு விருந்தினர்கள் இல்லாமல் நடைபெற உள்ளது. ராஜ்பவன் வளாகத்தில் மட்டுமே குறிப்பிட்ட அளவு அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொள்வர்.

ஆர்.வி.ஆர்லேகர் தற்போது கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு கவர்னராக பணியாற்றி வருகிறார். இப்போது தமிழகத்தையும் கூடுதலாக கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கவர்னர் மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.என்.ரவியின் பதவி காலத்தில் ஏற்பட்ட பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த மாற்றம் அமைந்துள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.வி.ஆர்லேகர் பதவியேற்ற பிறகு தமிழகத்தில் கவர்னர்-முதலமைச்சர் உறவு எப்படி இருக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு இந்த மாற்றத்தை வரவேற்றுள்ளது. ஆர்.என்.ரவியின் பதவி காலத்தில் ஏற்பட்ட பதற்றம் குறையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

இதையும் படிங்க: 2 மின்தூக்கி அமைக்க ரூ.3.55 கோடியா? சுவாமிமலையில் ஊழல்! கறாராக கணக்கு கேட்கும் அண்ணாமலை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share