×
 

தொட்டவங்களை விட மாட்டோம்! சொன்னதை செய்த முதல்வர் விஜய்! நேருக்கு நேரடி சிக்கல்!

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான ஊழல் வழக்கில் கடந்த திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை திரும்ப பெறுவதாக தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கில் முக்கிய திருப்பமாக, கடந்த ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த தகவல் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகராட்சித் துறையில் உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கான நியமனங்களில் முறைகேடு நடந்ததாகவும், சுமார் ரூ.634 கோடி அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை தமிழக காவல்துறை தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.

இதையும் படிங்க: 32 வீடு! 2 பண்ணை வீடு! ஏராளமான நகைகள்! விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய அரசு பொறியாளர்!

இதற்கிடையில், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கே.என். நேரு தரப்பிலும், அப்போதைய தமிழக அரசு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண், கடந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புதிய அரசு இந்த வழக்கை தொடர்ந்து நடத்த விரும்புவதால் மனுவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டதாகவும், அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார். ஆனால் கே.என். நேரு தரப்பில் ஆட்சி மாறினாலும் ஏற்கனவே நடந்த சட்ட நடவடிக்கைகளை மாற்ற முடியாது என்றும், இதுகுறித்து உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மறு ஆய்வு மனுக்கள் மற்றும் அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு மீதான விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் எந்தவித அடுத்தகட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது! கட்சி தாவிய நிர்வாகிகளுக்கு எதிரான அதிமுக மனு தள்ளுபடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share