×
 

“பட்டா கேட்கவில்லை, உரிமையை கேட்கிறார்கள்...” - மாஞ்சோலை மக்களுக்காக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி...!

மாஞ்சோலையில் மக்கள் வாழ்வதற்காக பட்டா கேட்கவில்லை, உரிமையை தான் கேட்கிறோம் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேச்சு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மலைப்பகுதியான மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களின் வாழ்வுரிமையை மீட்பதற்காக  போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்துவதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாமிரபரணி நதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 28 வருடங்களுக்கு முன்பு 1999 ஆண்டு இதே நாளில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வை மீட்டெடுப்பதற்காக நடைபெற்ற போராட்டத்தில் 17 பேர் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி பேரணியை நடத்தி வருகிறோம்.

அம்பாசமுத்திரம் பகுதியை புலிகள் காப்பகம் என அறிவித்து விட்டோம் என பொய்யான தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்து வருகிறார்கள். மாஞ்சோலை மக்களை வெளியேற்ற வனத்துறை துடிக்கிறது.

இதையும் படிங்க: தமிழக ரயில் திட்டங்களுக்கு நிலம் தருவதில் தாமதம்! ரயில்வே அமைச்சகம் குற்றச்சாட்டு!

மாஞ்சோலை மக்களின் எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் கோயமுத்தூர் நீலகிரியெல்லாம் காப்புக்காடுகள் கிடையாதா? புலிகள் அங்கே எல்லாம் இல்லையா? மாஞ்சோலையில் மட்டும் தான் புலிகள் உள்ளதா?

மாஞ்சோலையில் மக்கள் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். வனப்பகுதியில் வாழும் மக்களுக்கு அரசு சார்பில் எந்த இன்னல்களும் கொடுக்க கூடாது. அடுத்த கட்டமாக என்ன போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதை ஆலோசனை செய்ய இருக்கிறோம். நாம் குடித்த டீ அவர்கள் தயாரித்த டீ அதற்கான நன்றி கடன் இருக்க வேண்டும்.

மாஞ்சோலையில் நாங்கள் வசிக்க பட்டா கேட்கவில்லை. வாழும் உரிமை தான் கேட்கிறோம். தவெக அரசு மக்களின் உரிமையை பறிக்கும் படி செயல்படாமல் இருந்தாலே போதும் என்று கூறினார்.

இதையும் படிங்க: மக்களுக்கு நீட் வேண்டாம் என்றால் ரத்து செய்ய வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share