ரைமிங் பேச்சு நாசமாய் போச்சு... அதிமுக - பாஜக கூட்டணிக்கு வேட்டு வைத்த ராஜேந்திர பாலாஜி...!
அதிமுகவில் நிலவிய அழுத்தத்தை புரிந்து கொண்ட தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் எடப்பாடி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையுன்னு சொன்னாரு.
xசிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தற்போது மதவாதம் வரலாமா? இனவாதம் வரலாமா? என பலரும் எண்ணுகின்றனர். எங்களுக்கு அறிவுரை சொல்ல யாருக்கும் யோக்கியதே கிடையாது. அதிமுகவினருக்கு அறிவாற்றல் திறமை தெம்பு உண்டு. எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் துளிர்விட்டால் அங்கு எடப்பாடி பழனிச்சாமி இருக்க மாட்டார். வகுப்புவாதம் மதவாதம் என்று சொல்லி சிறுபான்மை மக்களை அதிமுகவிலிருந்து பிரிக்க திமுக திட்டம் போடுகிறது என திமுகவை வெளுத்து வாங்கினார்.
அவர் என்னமோ திமுகவினரை தான் கடுமையாக சாடினார். ஆனால் “மதவாதம் இருக்கும் இடத்தில் அண்ணன் எடப்பாடி இருக்க மாட்டாரு. அண்ணன் எடப்பாடி இருக்கும் இடத்தில் மதவாதத்திற்கு இடமில்ல” அப்படின்னு ரைமிங்ல பேசியது, அதிமுக - பாஜக கூட்டணிக்குள் அதிர்வலைகளை வீச வச்சியிருக்காம். ஏற்கனவே மதுரை வந்த அமித் ஷா தமிழத்தில் கூட்டணி ஆட்சி அமையுன்னு சொல்ல, அப்செட்டான அதிமுக முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி தலையை உருட்ட ஆரம்பிச்சாங்க.
இதனால் கூட்டணிக்குள் குண்டு வைக்கப்பார்த்த அதிமுக சீனியர்களிடமும், முக்கிய நிர்வாகிகளிடம் “பொறுத்திருந்து பார்ப்போம்... யாரு, இந்த விஷயம் பத்தி வெளியில பேச வேண்டாம்” என எடப்பாடி பழனிசாமி எச்சரித்ததாக சொல்லப்பட்டது. அதிமுகவில் நிலவிய அழுத்தத்தை புரிந்து கொண்ட தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் எடப்பாடி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையுன்னு சொன்னாரு. அவர் சொன்ன கருத்து சற்றே சர்ச்சையை தணித்தாலும், பாஜக போடும் தேர்தல் கணக்கு சரியில்லை, கொஞ்சம் உஷாரா இருங்கன்னு எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் சிலர் எச்சரித்துக் கொண்டு தான் இருக்கிறார்களாம்.
இதையும் படிங்க: அந்த கூட்டணி நீடிக்குமா? எங்க கூட்டணியை எதிர்க்க ஆளே இல்லை... அடித்து சொன்ன திருமாவளவன்!!
இந்த தலைவலி போதாதுன்னு எடப்பாடி பழனிசாமி பெயரையும் மதவாதத்தையும் பயன்படுத்தி ராஜேந்திர பாலாஜி பேசின பேச்சை டெல்லி பாஜக தலைமை ரசிக்கவில்லையாம். ஏற்கனவே பாஜக கூட்டணியை விட்டு விலக அதிமுக நினைப்பதாக செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு பாஜகவினரை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் இப்படி பேசலாமா? வேணாமான்னு ஒரு பக்கம் டாக் இருந்தாலும் பாஜகாவ நேரடியாக சொல்லலனாலும் சொன்ன கருத்து சரிதானே அப்படின்னும் அதிமுக ர.ரக்களே ராஜேந்திர பாலாஜிக்கு சப்போர்ட் பேச ஆரம்பிச்சியிருக்காங்களாம்.
இதையும் படிங்க: கேரளா, கர்நாடகாவை புரட்டிப்போட்ட கனமழை.. ஆட்டம் காட்டும் தென்மேற்கு பருவமழை..