×
 

நீலகிரியை சிதைக்கும் மழை.. மண் சரிவு..! முகாம்களுக்கு செல்லும் மக்கள்..!!

நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நீலகிரியில் கனமழை நீடித்து வருவதால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி மக்கள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இத்தலார், எமரால்டு, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மேலும், குந்தா, ஊட்டி, கூடலுார், பந்தலுார் உள்ளிட்ட பகுதிகளில் இரவு பகலாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கையாக மக்கள் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ரெட் அலர்ட் எதிரொலி... சவாரி, தொட்டப்பெட்டா சிகரம், பைன் பாரஸ்ட் செல்ல தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!

மேலும், இத்தலார் குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்புச் சுவர் இடிந்த விழுந்தது. மேல் பகுதியில் உள்ள குடியிருப்புகளும் சேதமாகும் என்றால் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை.. கோவை, நீலகிரிக்கு விரைந்தது பேரிடர் மீட்புப் படை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share