பழனிசாமியை முதல்வராக்க மு.க.ஸ்டாலின் ஆசைப்பட்டாரு!? நாங்க முடியாதுனு சொல்லிட்டோம்!! சி.பி.எம். பகீர்!
''அதிமுக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் யோசனையை திமுக முன்வைத்தது. நாங்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என கூறியதற்கு மறுத்துவிட்டோம்'' என மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பேபி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: தமிழக அரசியல் குழப்பம் நீடிக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபி முக்கிய பேட்டி ஒன்றை வெளியிட்டுள்ளார். தி.மு.க., தரப்பு அ.தி.மு.க., ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் யோசனையை முன்வைத்ததாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பேபி தன் பேட்டியில் கூறியதாவது: “தி.மு.க., கூட்டணியில் பல ஆண்டுகளாக இருந்த காங்கிரஸ் கட்சி, ஸ்டாலினுடன் எந்த ஆலோசனையும் செய்யாமல், அவருக்குத் தெரியாமல் கூட்டணியிலிருந்து வெளியேறியது. ஆனால் நாங்கள் அப்படிச் செய்ய விரும்பவில்லை. எங்கள் கட்சி நிர்வாகிகள் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தலில் தோல்வியடைந்துவிட்ட நிலையில், தமிழகத்தின் நலன் கருதி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற த.வெ.க.,வுக்கு ஆதரவு அளிக்க விரும்புவதாக ஸ்டாலினிடம் தெரிவித்தோம். ஆனால் ஸ்டாலின் அதை ஏற்க மறுத்தார். அ.தி.மு.க., ஆட்சி அமைக்கட்டும், அதற்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியிலிருந்து ஆதரவு கொடுங்கள் எனக் கேட்டார். நாங்கள் உடனே மறுத்துவிட்டோம்.
இதையும் படிங்க: தோல்விக்கு பொறுப்பேத்துக்கிட்டு ராஜினாமா பண்ணுங்க! நயினார் நாகேந்திரனுக்கு எதிராக கலகக்குரல்! பாஜக அதிர்ச்சி!
பா.ஜ.க., கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.,வுக்கு ஒருபோதும் ஆதரவு அளிக்க முடியாது என ஸ்டாலினிடம் தெளிவாகச் சொன்னோம்” என்றார்.
இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு தி.மு.க.,வுக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் த.வெ.க., ஆட்சி அமைக்கும் முயற்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில், ஸ்டாலின் அ.தி.மு.க., பக்கம் சாய முயற்சித்ததாக வரும் இந்தக் குற்றச்சாட்டு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
காங்கிரஸ் திடீர் வெளியேற்றம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் த.வெ.க., ஆதரவு ஆகியவை தி.மு.க.,வின் தேர்தல் தோல்விக்குப் பின்னான அரசியல் சமன்பாட்டை மேலும் சிக்கலாக்கியுள்ளன. தமிழக அரசியலில் கூட்டணி உறவுகள் எப்படி மாறுகின்றன என்பதை இந்த சம்பவம் பிரதிபலிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
த.வெ.க., ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இன்னும் உயிர்ப்புடன் உள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுதியான நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: புஸ்ஸ்ஸ்ஸ்.. எடப்பாடியின் முதல்வர் கனவு அம்போ! அதிமுக எம்.எல்.ஏ-க்கள் புகைச்சல்!