ரூ.1000 கோடி ஊழல் விவகாரத்தில் கே.என்.நேரு விரைவில் கைது? - தேதி குறித்த நீதிமன்றம்... அதிரடி காட்டும் ED...!
கடந்த வாரம் அமலாக்கத்ததுறை தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 1,020 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நகராட்சித்துறை ஊழல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு விரைவில் கைது செய்யப்படலாம் என டெல்லி வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. இதில் கோபாலபுரம் வரை புயல் வீசக்கூடும் எனவும் தகவல்கள் வெளிவருகிறது. மேலும் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் சந்திக்க உள்ளதாக தமிழக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. கடந்த வாரம் அமலாக்கத்ததுறை தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 1,020 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்ததுறை அமைச்சர் கே.என்.நேரு அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட சோதனைகளில் கிடைத்த டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்ததுறை மேற்கோள் காட்டி இருக்கிறது. கே.என்.நேரு மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டால் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்ததுறை விசாரணையை தொடங்க அது வழிவகுக்கும் என்று அதன் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அமைச்சர் கே.என். நேருவின் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையில் பெரும் மோசடி நடந்ததாக அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு அனுப்பியிருக்கும் இரண்டாவது கடிதம் அனுப்பபட்டது. அதில் நகராட்சி நிர்வாக துறையின் பணிகளை ஒதுக்குவதில் 7.5% முதல் 10% வரை அமைச்சர் கே. கே என் நேருவின் கூட்டாளிகளுக்கு லஞ்சமாக செலுத்தியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருக்கிறது. நகராட்சி நிர்வாக ஒப்பந்ததாரர்களிடமிருந்து கட்சிநிதி என்ற பெயரிலும் லஞ்சங்கள் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமைச்சர் கூட்டாளிகளின் தொலைபேசிகளிலிருந்து பெறப்பட்ட செய்திகள் உரையாடல்கள் அல்லது கணக்கீட்டு தாள்களின் அடிப்படையில் மொத்தம் 1020 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான நேரடி ஆதாரம் என்று அமலாக்கத்ததுறை தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: நெல்லை மக்களே ரெடியா?... ரூ.356 கோடியில் பிரம்மாண்ட திட்டங்கள்... அமைச்சர் கே.என்.நேரு சொன்ன குட்நியூஸ்...!
கழிப்பறைகள், துப்புறவு தொழிலாளர்களை அவுட்சோர்சிங் செய்தல், நபாட் திட்டங்கள், துப்புறவாளர் குடியிருப்புகள், கிராமசாலைகள், நீர் ஏறி வேலைகள் என கிட்டத்தட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்திலிருந்தும் லஞ்சங்கள் வசூலிக்கப்பட்டிருக்கிறது. லஞ்ச பணம் பின்னர் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஹவாலா வலையமைப்புகள் மூலம் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் சென்னை ஆரியபுரத்தில் பெனிஸ் எனர்ஜி என்ற சோலார் பேனல் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தொழிலதிபர் பசுபதி கோபாலன் வீட்டிலும் சென்னை தியாகராயா நகரில் இயங்கி வரும் ரெபக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திலும் வருமானவரி சோதனை அதிரடியாக நடத்தப்பட்டது.
இதில் ஹவாலா பணம் மாற்றப்பட்டுள்ளதும் தெரிய வந்திருக்கிறது. மேலும் நிறுவனத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் மேலெடுத்து உறவுக்கு தொடர்பான ஏகப்பட்ட ஆவணங்கள் சிக்கி இருக்கின்றனவா? இதற்கிடையில் ஒரு பதவிக்கு 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை என மொத்தமாக 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என்பதால் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய கோறி தமிழக டிஜிபிக்கு
கடந்த அக்டோபரில் அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி இருந்தது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் இது தொடர்பாக தலைமைச் செயலாளரிடம் உரிய அனுமதிகளை பெற்று வழக்கு பதிவு செய்யும்படி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட கோரி மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம். எம். ஸ்ரீவஸ்தவா நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கி அமர்வு தமிழக அரசு டிஜிபி மற்றும் அமலாக்கத்ததுறை ஜனவரி 23ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது. இந்த சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: FIR-க்கு முன் டிஜிபிக்கு நெஞ்சுவலி... ED சுழலில் சிக்கித் தவிக்கும் திமுக... அடுத்த செந்தில் பாலாஜி இவரா?