×
 

அமித் ஷாவுடன் வைரலான போட்டோ... மிளகாய் பொடி வெங்கடேசனை தூக்கியடித்த பாஜக...!

கட்சி பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை.

செங்குன்றம் அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பாஜக மாநில நிர்வாகி மொளகாப்பொடி வெங்கடேஷ் கட்சியில் இருந்து நீக்கம். கட்சி பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகரை சேர்ந்தவர் மொளகாப்பொடி வெங்கடேஷ் என்கிற கே.ஆர்.வெங்கடேஷ். இவர் பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளராக பதவி வகித்து வந்தார். ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்குகள், ஆவடி காவல் ஆணையரகத்தில் பண மோசடி, துப்பாக்கி வைத்து மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது.

அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்திருந்த போது அவரை கே ஆர் வெங்கடேஷ் நேரில் சந்தித்து அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். தொழிலதிபர் ஒருவருக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட புகாரில் மொளகாப்பொடி வெங்கடேஷ் நேற்று செங்குன்றம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: மோசடி வழக்கில் கைதான பாஜக நிர்வாகி... சாட்டையை சுழற்றிய நயினார் நாகேந்திரன்!!

இந்நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த K.R.வெங்கடேஷ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: புல்லட் பாண்டி.. அழுத்தமா அடிங்க.. முதலமைச்சரை கிண்டல் அடித்த அண்ணாமலை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share