×
 

ஒருவேளை பதுக்கி வச்சியிருப்பாரோ?... நயினார் நாகேந்திரனை பங்கமாய் கலாய்த்த அமைச்சர் ரகுபதி...!

என் டி ஏ கூட்டணியை பார்த்து எங்களுக்கு என்ன பயம், அவர்கள் தான் பயந்து ஒவ்வொருவர் காலில் விழுந்து எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள் என்று கெஞ்சி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மச்சுவாடி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2025-2026ன் கீழ் தஞ்சாவூர் மானாமதுரை சாலையில் 19.5 போடி ரூபாய் மதிப்பில் அண்டக்குளம் விளக்கு சாலை முதல் டிவிஎஸ் கார்னர் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் இதில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறுகையில்: சமையலுக்கு எரிவாயுவையே கொடுக்க முடியாத பிரதமர் மோடி நாட்டை காப்பாற்ற போகிறாரா? அமெரிக்காவுக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். அமெரிக்காவினுடைய அடிமைகளாக நம்மளையெல்லாம் வைத்திருக்கிறார். அதுதான் அவர் இந்த 11 ஆண்டு காலத்தில் செய்திருக்கிற மிகப்பெரிய சாதனை என்று சொல்ல முடியும்.

இதையும் படிங்க: ஒரே நாளில் 3 பாலியல் குற்றங்கள்... ஈரக்குலை நடுங்குது..! கொதித்துப் போன நயினார்..!!

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சொல்வதை தவிர வேற வேலையே கிடையாது அவங்களுக்கு. சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கு. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான். எல்லா பேப்பர்லயும் பாருங்க ஒவ்வொரு மாநிலத்திலும் என்னென்ன கலாட்டாக்கள் நடக்குது, என்னென்ன பிரச்சனைகள் நடக்குது, என்ன அடிதடி சண்டைகள் நடக்குது, என்ன கலவரங்கள் நடக்குது என்பதெல்லாம் தினசரி பேப்பர்கள்ல  வருகிறது. தமிழ்நாட்டுல அதில் ஒரு பங்கு வந்தா பெரிய விஷயம். எனவே தமிழ்நாட்டில் தான் இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது.

மானாமதுரை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. நாங்கள் யார் தவறு செய்தாலும் யாரையுமே எங்களுடைய முதலமைச்சர் காப்பாற்ற மாட்டார். சிபிசிஐடி விசாரணையில் உண்மை தெரியும்.

லாக்-அப் மரணங்களைப் பற்றி அதிமுக பேசவே முடியாது. அதிமுக ஆட்சியில் தினசரி எத்தனை நடந்துச்சுன்னு யாருக்குமே தெரியாது. அந்த அளவுக்கு லாக்-அப் மரணங்கள் எல்லாம் நடந்திருக்கு. அதனால் லாக்-அப் மரணங்கள் அதிமுக ஆட்சியில் கிடையாது, திமுக ஆட்சியில்தான் 27 அப்படின்னு சொன்னா அதை விட அப்பட்டமான பொய் வேற எதுவும் இருக்க முடியாது. எங்களைப் பொறுத்தவரை லாக்-அப் மரணம்னா அதுக்கு விசாரிச்சு உரிய தண்டனை நடவடிக்கை எடுக்கப் போறோம், தண்டனை கொடுக்கப் போறோம். நாங்க யாரையும் அடித்துக் கொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது, அவங்களுக்குத்தான் அதெல்லாம்.

அங்கொன்றும் இங்கொன்றும் ஒரு சில சம்பவங்கள் நடப்பது உண்டு. ஆனால் இந்தியா என்று எடுத்துக்கொணண்டால் இங்கே இருக்கக்கூடிய மாநிலங்களிலேயே சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கக்கூடிய மாநிலம், பாதுகாப்பாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான். அதுக்காக எந்தச் சம்பவமுமே நடக்கலைன்னு சொல்ல முடியாது. எஃப்.ஐ.ஆர் போட்டுக்கிட்டுத்தான் இருக்கோம். ஆனால் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இன்றைக்குச் சிறப்பான மாநிலம், பாதுகாப்பான மாநிலம்.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்றும் தட்டுப்பாடு இருந்தால் நானே தருகிறேன் என்றும் நயினார் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு ஒருவேளை அவர் பதுக்கி வைத்திருப்பாரோ என்னவோ தெரியவில்லை என்று ரகுபதி பதிலளித்தார். 

மேலும் பேசியவர் என் டி ஏ கூட்டணியை பார்த்து எங்களுக்கு என்ன பயம், அவர்கள் தான் பயந்து ஒவ்வொருவர் காலில் விழுந்து எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள் என்று கெஞ்சி வருகின்றனர். எங்களுக்கு பயமில்லை நாங்கள் ஜில்லென்று போகி வருகிறோம். 2026 இல் நாங்கள்தான் வெற்றியடைய போகிறோம் அது தெரிந்து விட்டது. அது அவர்களுக்கும் தெரிந்து விட்டது. அதனால் தான் இன்னும் இழுத்துக் கொண்டு இருக்கின்றனர் தொகுதி உடன்பாட்டை கூட அவர்களால் செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

என்டிஏவில் கூட்டணியில் எத்தனை கட்சிகள் கூட்டணியில் சேர்ந்தாலும்   இன்றைய திமுக கூட்டணியை தமிழ்நாட்டில் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. கரூரில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில்  பார்த்ததை தவிர செந்தில் பாலாஜி என்ன தவறை செய்தார், செந்தில் பாலாஜிக்கு சி பி ஐ சமன் கொடுத்துள்ளது திமுகவை மிரட்டி பார்க்கின்ற செயலாக எடுத்துக் கொள்ளலாம், அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். செந்தில் பாலாஜி இதையெல்லாம் பலமுறை சந்தித்தவர், அவர் தைரியசாலி மிகவும் தைரியமாக அவர் எதிர்கொள்வார்.

என் டி ஏ கூட்டணிக்கு  விஜயை கொண்டு வரத்தான் சிபிஐ சமன் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் ரகுபதி அது மோடிக்கும் அமித் ஷாவுக்கும் உண்டான வெளிச்சம். எங்களுக்குத் தெரியாது அந்த வெளிச்சம் என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: ஓயாமல் நடக்கும் பாலியல் குற்றங்கள்… ஸ்டாலின் காதுக்கு எட்டுதா? பந்தாடிய நயினார்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share