சேகர்பாபுவுக்கு இது அவமானமா? அதிகாரிகளுக்கு வேற வேலையே இல்லையா? அமைச்சர் ரமேஷ் ஆவேசம்!
தாம் எந்தவொரு விஐபி வரிசையிலும் செல்வதில்லை என்றும், பொதுமக்களுடன் இணைந்து கோவில்களில் தரிசனம் செய்வதாகவும் அமைச்சர் ரமேஷ் கூறினார்.
திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கோவில் தரிசனம் தொடர்பான சர்ச்சை, இடைத்தேர்தல் மற்றும் தமிழக மின்சார நிலவரம் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.
முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவில்களில் அதிகாரிகளின் உதவியுடன் சிறப்பு தரிசனம் செய்ததாக எழுந்த விமர்சனம் குறித்து அமைச்சர் ரமேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பொதுவழியில் மக்களோடு மக்களாக சென்று சாமி தரிசனம் செய்வது அவமரியாதையான விஷயமா என கேள்வி எழுப்பினார்.
அதிகாரிகள் மக்கள் பணியாற்றுவதற்காகவே உள்ளதாகவும், ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் தரிசனம் செய்து வைப்பதற்காக அதிகாரிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். தாம் எந்தவொரு விஐபி வரிசையிலும் செல்வதில்லை என்றும், பொதுமக்களுடன் இணைந்து கோவில்களில் தரிசனம் செய்வதாகவும் அமைச்சர் ரமேஷ் கூறினார்.
இதையும் படிங்க: "சேகர்பாபுலாம் பெரியார் பத்தி பேசவே கூடாது"..! சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ்..!!
பொதுமக்களுடன் நேரடியாக செல்வதன் மூலமே அவர்களின் பிரச்சினைகள் மற்றும் சிரமங்களை புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆட்சியில் சேகர்பாபு என்ன செய்தார் என்பது மக்களுக்கு தெரியும் எனவும் அமைச்சர் ரமேஷ் விமர்சித்தார்.
இதனிடையே, தமிழக முதல்வர் குறித்து பேசிய அமைச்சர், முதல்வர் பதவியில் இருக்கும் வரை தாங்கள் எந்த விஷயத்தையும் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும், அவர் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக இருப்பார் என்றும் தெரிவித்தார். நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கும் அமைச்சர் ரமேஷ் பதிலளித்தார். இதுதொடர்பாக அவர் விரிவாக தனது கருத்தை தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், மின்சார விநியோகம் தற்போது தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மின்வெட்டு இல்லை என்றும் கூறினார்.
பிரச்சினைகள் சரி செய்யப்படுவதற்கு முன்பாகவே சிலர் திட்டமிட்டு போராட்டங்களை நடத்துவதாகவும், போராட்டம் நடத்துவதற்காகவே சிலர் இருப்பதாகவும் அமைச்சர் ரமேஷ் விமர்சித்தார். மக்கள் நிலைமையை தெளிவாக புரிந்துகொண்டிருப்பதாகவும், அதனால்தான் அரசுக்கு வரவேற்பு கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குழம்பிய மனநிலையில் கம்யூ.,க்கள்!! இரட்டை நிலைப்பாடு ஏன்? எல்.முருகன் போட்ட காட்டமான விமர்சனம்!