×
 

“இதுதான் உங்க டக்கா...” - அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் ரியாக்‌ஷன்..!

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அடுத்த வாரம் டெல்லி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மீன்வளத்துறை ஸ்ரீநாத் தெரிவித்த கருத்துக்களால் மீனவர்கள் அதிருப்தி

தூத்துக்குடி மீன்வளத்துறை மானிய கோரிக்கையின் போது மீனவர்களுக்கு பயனளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு இருக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து டெல்லி சென்று வெளியுறவு  துறை அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திற்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட கழக செயலாளராக புதிய பொறுப்பு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார் அங்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர் இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், மீன்வளத்துறை மானிய கோரிக்கையின் போது அறிவிப்புகள் மீனவர்களுக்கு சாதகமாக இருக்கும் அவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு தமிழக முதல்வரிடம் பேசியுள்ளோம் நிதி அமைச்சரும் நமக்கு ஆதரவாக இருக்கிறார் நல்ல திட்டங்கள் மீனவர்களுக்கு நன்மை பயக்க கூடிய வகையில் நன்மை நடக்கிறது மாதிரி இருக்கும் 

ஆழ்கடல் மீன்பிடிப்பு தொடர்பாக மீன்வளத்துறை மானியை கோரிக்கை வரும் போது தான் தெரியும். ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையான் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளது தமிழக முதல்வரிடம் பேசி அடுத்த வாரம் டெல்லி சென்று அங்கே வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரிடம் இதைப் பற்றி பேசப் போகிறோம் கண்டிப்பாக நல்ல முடிவு எடுப்போம் 

இதையும் படிங்க: 1.20 மணி நேரத்திலேயே முடிந்த முதலீட்டாளர் மாநாடு.. ஊடகங்களை அழைக்காததன் பின்னணி என்ன?

என்னை மாவட்ட செயலாளராக அறிவித்ததற்கு தமிழக முதல்வருக்கும் முதன்முதலில் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு பொறுப்பு கொடுத்ததற்கு நன்றி பொதுச் செயலாளர்  புஸ்ஸி ஆனந்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் கழகத்தில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் முக்கியமாக என்னை நம்பி வாக்களித்த தூத்துக்குடி மக்கள் என்னை கௌரவப்படுத்தி இந்த இடத்தில் வைத்துள்ளதற்கு ரொம்ப ரொம்ப நன்றி இது ஒரு முக்கியமான பொறுப்பு உறுப்பை சீரும் சிறப்புமாக செய்ய வேண்டும் முக்கியமாக தளபதியுடைய இந்த கௌரவத்தை நான் மேன்மேலும் கவுரவப்படுத்துவேன்

குடிநீர் பிரச்சனை குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் பேசியுள்ளேன். தற்போது குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்

இதையும் படிங்க: பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share