×
 

"பெண்களுக்கு உந்துசக்தி"... உச்ச நீதிமன்ற நீதிபதியாகிய வழக்கறிஞர் மோகனா... முதல்வர் விஜய் வாழ்த்து..!

உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வழக்கறிஞர் மோகனாவிற்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் முக்கியமான தருணமாக, 2026 மே 27 அன்று உச்ச நீதிமன்ற கொலீஜியம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகனா உள்ளிட்ட ஐந்து பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்தது. மத்திய அரசு இந்த பரிந்துரைகளை ஏற்று அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்தது. இதன் மூலம் மோகனா உச்ச நீதிமன்றத்தின் 12வது பெண் நீதிபதியாகவும், நேரடியாக வழக்கறிஞர் தரப்பில் இருந்து உயர்த்தப்படும் இரண்டாவது பெண்ணாகவும் வரலாறு படைத்துள்ளார். 

மூத்த வழக்கறிஞர் மோகனா உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆகி இருப்பதற்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்கறிஞராகப்பணியாற்றி நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். வெங்கிட சுப்பிரமணி மோகனாவின் நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாகத் திகழும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

உச்ச நீதிமன்றத்தின் 12 வது பின் நீதிபதியாகவும் வழக்கறிஞர் தரப்பில் இருந்து உயர்த்தப்படும் இரண்டாவது பெண்ணாகவும் வரலாறு படைத்திருக்கும் மோகனாவிற்கு முதல்வர் விஜய் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் வழக்கறிஞர் மோகனாவிற்கு தன் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க: "மீண்டும் சந்திக்கும் வரை"... அதே பாணியில் தயாராகிய பரப்புரை பேருந்து..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share