×
 

பட்ஜெட்டில் இதெல்லாம் இல்லையே?... சி.எம்.விஜயை டேரக்ட்டா அட்டாக் செய்த முத்தரசன்...!

தற்போது உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகள் அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் .

நாடாளுமன்றத்தில் மகளிர்க்கான இட ஒதுக்கீடு , நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்துதல், ஆகியவற்றில் ஒன்றிய அரசு இரட்டை வேடம் போடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கும்பகோணத்தில் செய்தியாளர்கள் தெரிவித்தார் .

 கும்பகோணம் அருகே அண்ணல் அக்கரகாரம் என்ற இடத்தில் இந்தியாவில் மாற்றத்தை உருவாக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களை சந்திக்கும் நடை பயண பரப்புரை இயக்கத்தினை முத்தரசன் இன்று துவக்கி வைத்தார் .

 அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு கொள்கை மற்றும் நாடாளுமன்றத்தில் தொகுதி மறு வரைமுறை ஆகியவற்றில் ஒன்றிய அரசு இரட்டை வேடம் போடுவதாகவும், தற்போது உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகள் அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் .
 பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக 543 தொகுதிகளை 850 தொகுதிகளாக உயர்த்த பாஜக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனை கடுமையாக கண்டிப்பதாகவும் முத்தரசன் தெரிவித்தார் .

இதையும் படிங்க: கூட்டணிக்குள் குண்டு வைத்த முத்தரசன்... உதயநிதிக்கு ஆதரவாக சுடச்சுட சி.எம்.விஜய்க்கு பதிலடி...!

 தமிழகத்தை பொறுத்தவரை வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் தருவதாக விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார். அது தொடர்பான எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை.  இதனைப் போல அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக செல்லலாம் என தேர்தல் பரப்புரையில் தமிழக வெற்றி கழகம் தெரிவித்திருந்தது.

 அது தொடர்பான அறிவிப்பும் இந்த நிதி நிலை அறிக்கையில் இல்லை. விவசாயிகளின் வேளாண் கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்த்த நிலையில் அது தொடர்பான அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.  தொகுதி மறு சீரமைப்புக்கு அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டும் தமிழக முதல்வர் விஜய், மேகதாது அணை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க மறுக்கிறாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு,  காவிரி பிரச்சனை மேகதாது பிரச்சனை தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சனை, அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்டினால் ஒவ்வொரு கட்சியினரும், ஒவ்வொரு கருத்துக்களை கூறுவார்கள் அதனை புறம் தள்ளுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மறுப்பது சரியானது அல்ல என்றும், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது தேவையற்றது என தமிழக அமைச்சர் தெரிவித்துள்ளாரே? என கேட்டதற்கு தமிழக அமைச்சரின் இந்த பதில் கண்டிக்கத்தக்கது என முத்தரசன் தெரிவித்தார் .
 

இதையும் படிங்க: “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share