×
 

இன்னும் எத்தனை காவல் மரணங்கள்..? முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

விசாரணை கைதி அருணாச்சலம் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.

தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த இளைஞர் அருணாச்சலம், தென்பாகம் காவல் நிலைய போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு முன் அருணாச்சலம் அளித்த மரண வாக்குமூல வீடியோவில், “போலீசார் தன்னைத் தலையில் தாக்கினர்” எனக் கூறியிருப்பது இந்தக் கொடூரத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், “நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் சிறை ஊழியர்களின் தாக்குதலால் பலியான சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், தூத்துக்குடியில் மீண்டும் ஒரு காவல் மரணம் நிகழ்ந்துள்ளது.

தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர்கதையாக மாறியுள்ளதை நிரூபிக்கிறது என தெரிவித்துள்ளார். இன்னும் எத்தனை காவல் மரணங்கள் நிகழும் என முதல்வர் ஜோசப் விஜய் விளக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுவரை இந்த விவகாரங்களில் அவர் மௌனம் காக்கும் நிலை கவலையளிக்கிறது என்றார்.

இதையும் படிங்க: படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

மேலும், “பாதிக்கப்பட்ட அருணாச்சலத்தின் மரணத்திற்குப் பொறுப்பான தென்பாகம் காவல் நிலைய அதிகாரிகள் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தகுந்த நீதியையும், உரிய இழப்பீட்டையும் விரைந்து வழங்க வேண்டும் என்று தவெக அரசை நயினார் நாகேந்திரன் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். இந்த சம்பவங்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

இதையும் படிங்க: சிறைக்குள் சபரி வர்மனுக்கு நடந்தது என்ன..? யார் பொறுப்பு..? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share