×
 

மீண்டும் குழந்தைகளுக்கு குறி வைக்கிறீங்களா?! ஆட்சி கவிழ்ந்திடும்னு பயமா விஜய்? நயினார் கேள்வி!

தவெகவின் கட்சி நிகழ்வை, அரசுப் பள்ளிகளில் நேரலையில் ஒளிபரப்புவதற்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?

கரூரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி அரசுப் பள்ளிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான காணொளிகளைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி சில அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டதாகக் கூறப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து, தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவின் மூலம் நயினார் நாகேந்திரன் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

அவர் தனது பதிவில், **“கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல, அரசியலின் மேடை அல்ல” என்று நீங்கள் நீட்டி முழக்கி, இன்னும் ஒரு நாள் கூட முழுதாக முடிவடையவில்லை, அதற்குள் இன்று கரூரில் முதல்வர் விஜய் பங்கேற்ற விழா, பள்ளிக்கூடங்களில் “நேரலை”யில் ஒளி பரப்பப்படுவதாக காணொளி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பணம் கொடுக்குறது மட்டுமில்ல! இதுவும் லஞ்சம்தான்! முதல்வர் வழங்கிய அரசுப்பணி! விளாசும் நயினார் நாகேந்திரன்!

 

உபதேசமெல்லாம் ஊருக்கு மட்டும் தானா?

“கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல, அரசியலின் மேடை அல்ல” என்று நீங்கள் நீட்டி முழக்கி, இன்னும் ஒரு நாள் கூட முழுதாக முடிவடையவில்லை, அதற்குள் இன்று கரூரில் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் பங்கேற்ற விழா, பள்ளிக்கூடங்களில் “நேரலை”யில் ஒளி… https://t.co/SSivyezXrd pic.twitter.com/mPc1haVA6f

— Nainar Nagenthran (@NainarBJP) July 10, 2026

சட்டமன்ற விவாதங்களை தடையின்றி நேரலையில் ஒளிபரப்ப முடியாத உங்கள் தவெக அரசு, தவெகவின் கட்சி நிகழ்வுகளை மெனக்கெட்டு அரசுப் பள்ளிகளில் நேரலை செய்வது அருவருப்பான அரசியல் வியூகம். பள்ளிக் கூடங்களையும், படிக்கும் மாணவர்களையும், கட்சி தூதுவர்கள் போல பாவிக்கும் தவெகவினரின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது. இல்லை தெரியாமல்தான் கேட்கிறோம், வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு, பிள்ளைகளை பார்க்கச் செய்யுமளவிற்கு இன்றைய கரூர் நிகழ்வு என்ன அறிவார்ந்த அரசு நிகழ்ச்சியா? அல்லது அனுபவம் வாய்ந்த அறிஞர்கள் பங்கேற்ற அறிவியல் விவாத மேடையா?

தனது தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்கு, ஜோசப் விஜய் பாவ மன்னிப்பு கேட்கும் “Personal Event” தானே? மற்ற கட்சிகளை குறை கூறி, தங்களை புனிதராக நிறுவ முற்படும் தவெகவின் கட்சி நிகழ்வை, அரசுப் பள்ளிகளில் நேரலையில் ஒளிபரப்புவதற்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? அந்தளவிற்கு விளம்பர மோகம் உங்களை வாட்டி வதைக்கிறதா? அல்லது எப்படியும் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தில் மீண்டும் குழந்தைகளை குறிவைக்க முயற்சிக்கிறீர்களா?”** என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதாக கூறப்படும் விவகாரம் அரசியல் ரீதியாக மேலும் கவனம் பெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: திமுக கொடி கட்டிய காரை ஏற்றி சிறுமியைக் கொல்ல முயற்சி?!! விருதுநகரில் பரபரப்பு!! விளாசிய நயினார் நாகேந்திரன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share