ஸ்டாலினுக்கு அசிங்கமா இல்லையா..? எடப்பாடியும் தான் உடந்தை..! குண்டைத் தூக்கிப் போட்ட அமைச்சர் நிர்மல் குமார்..!
குதிரை பேரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழக வெற்றி கழக எம்எல்ஏக்கலை விலைக்கு வாங்க குதிரை வீரம் நடந்ததாக புகார் எழுந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விஷயம் பூதாகரமாக வெடித்திருக்கும், நிலையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி என 40 நாட்களாக சொல்லிக் கொண்டிருந்தோம் என்று குறிப்பிட்டார்.
உதயநிதி உத்தரவின் பேரில் தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏக்களிடம் பணம் கொடுப்பதாக பேரம் பேச இருப்பதாக தெரிவித்தார். ஸ்டாலினும் உதயநிதியும் 50 கோடி ரூபாய் வரை மற்ற கட்சி எம்எல்ஏக்கள் இடம் பேரம் பேசுவது மிகவும் கேவலம் என அமைச்சர் நிர்மல் குமார் சாடினார். பல எம்எல்ஏக்கள் புகார் தந்துள்ளனர் என்றும் ஒரு சில எம்எல்ஏக்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியும் ஒரு வழியில் திமுகவுடன் கூட்டு சேர்ந்து தமிழக வெற்றிக்கழக ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கீழ்தரமான, கேவலமான வேலை செய்வோர் மீது சட்டபூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். கைது செய்யப்பட்ட நரேஷ் தொடர்ந்து செந்தில் பாலாஜி உடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். செந்தில் பாலாஜி கூடவே உள்ளவர்கள், கரூர் கம்பெனி நடத்துவோர் நேரடியாக குதிரை பேரும் விவகாரத்தில் தொடர்பு என்று குறிப்பிட்டார். திமுகவின் செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். குதிரை பேரத்தில் ஈடுபட்ட ஸ்டாலினுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா என்று காட்டமாக அமைச்சர்த் நிர்மல் குமார். கேள்வி எழுப்பி இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்க கேவலமாக முயற்சித்து தான் ஸ்டாலின் தோல்வி அடைந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “இப்ப தும்முனா சரியா இருக்கும்...” - கூட்டணி கட்சிகளுக்கு கொக்கி போடும் விஜய்... பின்னணி என்ன தெரியுமா?
ஓட்டுக்கு உங்களை போல் பணம் தராமல் தேர்தலை சந்திப்பதால் எங்களுக்கு தேர்தலை மீண்டும் சந்திப்பதில் பயமில்லை என்றும் குறிப்பிட்டார். முதல்வர் வேட்பாளராக தோற்ற ஸ்டாலின் தயவு செய்து அரசியலில் இருந்து விலகி விடுங்கள் என்றும் வலியுறுத்தினார். செந்தில் பாலாஜி, அசோக் போன்றோரை வைத்துக்கொண்டு அரசியல் செய்தால் இப்படிதான் தோல்வியடைவீர்கள் என்றும் விமர்சித்தார். திமுகவினர் மாட்டிக்கொண்டதால் சமாளிப்பதற்காக முதல்வர் குதிரை பேரும் செய்ததாக திமுக ஆளுநரிடம் கடிதம் அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார். நாங்கள் யாரிடமாவது பேசினோமா அல்லது அதற்கு உரிய ஆதாரம் இருக்கின்றதா என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: தவெக MLA- விடம் ரூ. 35 கோடிக்கு பேரம்..! செந்தில் பாலாஜிக்கு தொடர்பு..! காவல்துறை திடுக்கிடும் தகவல்..!!