×
 

தவெக MLA- விடம் ரூ. 35 கோடிக்கு பேரம்..! செந்தில் பாலாஜிக்கு தொடர்பு..! காவல்துறை திடுக்கிடும் தகவல்..!!

செந்தில் பாலாஜியின் அறிவுரையின் பேரிலேயே ஆட்சியை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது என காவல்துறை விளக்கம் கொடுத்திருக்கிறது.

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து “குதிரை பேரம்” என்பது அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. மாற்றுக் கட்சியினரை தமிழக வெற்றிக் கழகத்தினர் விளக்கு வாங்குவதாக பெரும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ-வை பேரம் பேசியதாக புகார் எழுந்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைய வேண்டும் என்று பேரம் பேசியதாக தெரிகிறது.

பேரம் பேசியதாக செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இரண்டு பேர் உட்பட நான்கு நபர்களை போலசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். Youtuber திருநாவுக்கரசு என்பவரது இல்லத்தில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பேரம் பேசப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிக்க பேரம் பேசப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எதிர்த்து வாக்களிக்கும் 35 கோடி பேரம் பேசப்பட்டதாக போலீசார் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியைக் கவிழ்க்கவும் கட்சி மாறவும் தமிழக வெற்றி கழக எம்எல்ஏவிடம் 35 கோடி வர பேரம் பேசப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் வாங்க எம்எல்ஏ இளையராஜா மறுத்ததால் அவரை திருநாவுக்கரசு மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING: ஒரு MLA- வுக்கு 15 கோடி..? பேரம் பேசப்பட்ட எம்எல்ஏக்கள் யார்... யார்..? LIST எடுக்கும் தவெக தலைமை..!!

குறிப்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுரை பேரிலேயே ஆட்சிக்கமைப்பு முயற்சி நடந்ததாக புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று போலிஸ் தரப்பில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனக்கு விருப்பமில்லை என்றும் என்னிடம் இனிமேல் பேசாதீர்கள் என்றும் இளையராஜா கண்டிப்புடன் கூறியதால் திருநாவுக்கரசு மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக வெற்றி கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டதாக சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அது மட்டுமல்லாது பேரம் குறித்து வெளியில் கூறினால் இளையராஜா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஆட்சி கவிழ்ப்பு முயற்சியா..? கோடிக்கணக்கில் பேரம்... செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அதிரடி ARREST..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share