×
 

அமைச்சர் மிரட்டும் தொனியில் பேசுறாரு... செவிலியர் சங்க பொதுச்செயலாளர் பகிரங்க குற்றச்சாட்டு...!

மிரட்டும் தொனியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசி வருவதாக செவிலியர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும், கொரோனா காலகட்டத்தில் பணி செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சேப்பாக்கம் சிவானந்த சாலை பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை மாலை 4 மணிக்கு பிறகு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மாநகர பேருந்து மூலமாக ஏற்றி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இறக்கி விடப்பட்ட நிலையில், அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லாமல் பேருந்து நிலையத்தின் நடைமேடை 9-ல் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நள்ளிரவு நேரத்தில் கொட்டும் பனியையும் பொறுத்தப்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், செவிலியர் சங்கத்துடன் இன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.

இதையும் படிங்க: களைக்கட்டுது ஈரோடு… விஜய் பார்க்க QR CODE, பாஸ் தேவையே இல்லை… செங்கோட்டையன் அறிவிப்பு…!

சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். சாத்தியமான கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என அமைச்சர் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செவிலியர் சங்க பொதுச் செயலாளர் சுபின், தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 730 செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். தாங்கள் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று பேச்சு வார்த்தை நடந்ததாக கூறினார். அப்போது, மிரட்டும் தொனியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசி வருவதாக குற்றம் சாட்டினார். 

இதையும் படிங்க: யாருடன் கூட்டணி..? டைம் இருக்கு., ஆனா இது நடக்கும்… TTV தினகரன் ப்ளீச் பேச்சு…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share