எங்கள நடுத்தெருவில் விட்டுட்டாரு ஓபிஎஸ்.... ஆதங்கத்தைக் கொட்டிய ஆதரவாளர்..!!
OPS தங்களை நடுத்தெருவில் விட்டதாக அவரது ஆதரவாளர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். இந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, காரணம் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இது ஒரு பெரிய மாற்றத்தை குறிக்கிறது.ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர்.
அவரது மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட உள் மோதல்களால், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு தனியாக செயல்பட்டு வந்த அவர், சமீப காலமாக திமுக அரசின் நல்லாட்சியை பாராட்டி வந்தார்.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான ஓ. பன்னீர்செல்வம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். இன்று காலை, அவர் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றபோது, முதலமைச்சர் ஸ்டாலின் அவரை ஆரத்தழுவி வரவேற்றார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: நாங்க இருக்க வரைக்கும் தான் தேனி "கோட்டை" ... இப்ப வெறும் ஓட்டை..!! ரைமிங்கில் பேசிய ரவீந்திரநாத்..!!
தீய சக்தியை திமுகவை உழைக்க வேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் பாடுபட்டதாகவும், அதற்குப் பிறகு ஜெயலலிதா திமுக மற்றும் கருணாநிதி ஒழிக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டதாகவும், நல்லாட்சி கொடுத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் ஆனால் ஜெயலலிதாவால் மூன்று முறை முதலமைச்சராக அடையாளம் காட்டப்பட்ட ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருப்பது ரத்தம் கொதிக்க செய்கிறது என்று கூறினார்.
அவருக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு அதிருப்தியை கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இவர் இப்படி ஜெயலலிதாவிற்கு விசுவாசியாக இருந்திருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது என்றும் தெரிவித்தார். எங்களையெல்லாம் நடுத்தெருவில் விட்டுவிட்டு அவர் சுயநலத்திற்காக சென்றிருக்கிறார் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் ஆதங்கத்தை கொட்டினார்.
இதையும் படிங்க: நீயெல்லாம் செத்தவன்தான்... கல்லறை கல்லும் காரித் துப்பும்..! OPS- ஐ விளாசிய வளர்மதி..!!