சபாநாயகர் பேச்சு அவதூறு... முற்றுகையிட்ட காங்கிரஸ் MP-க்கள்..! வீடியோ காட்சி வெளியீடு..!
சபாநாயகர் அறையை காங்கிரஸ் எம்பிக்கள் முற்றுகையிட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறிய குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் போது நிகழ்ந்தது. மக்களவையில் பிரதமர் மோடி தனது பதிலுரையை ஆற்ற இருந்த நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடுமையான அமளியில் ஈடுபட்டனர்.
பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள், குறிப்பாக பெண் எம்.பி.க்கள், பிரதமரின் இருக்கை அருகே கூடி, பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவை கடுமையான குழப்பத்திற்குள்ளானது மற்றும் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் மோடி அன்றைய தினம் அவையில் பேச முடியாமல் போனது. இதையடுத்து சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையில் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
பிரதமர் பதிலுரை ஆற்ற இருந்தபோது, காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் பிரதமரின் இருக்கை அருகே எதிர்பாராத சம்பவம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாக தனக்கு உறுதியான தகவல் கிடைத்தது. அத்தகைய சம்பவம் நடந்திருந்தால், நாட்டின் ஜனநாயக மரபுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் என்று அவர் கவலை தெரிவித்தார். இதனால், அத்தகைய ஆபத்தைத் தவிர்க்கும் வகையில், பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என்று தான் நேரடியாகக் கேட்டுக்கொண்டதாக ஓம் பிர்லா தெரிவித்தார். காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி மற்றும் சுதா இருவரும் பிரதமரை தாக்க திட்டமிட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இதையும் படிங்க: அமெரிக்க விவசாயத்துறை இந்திய விவசாயிகளை நசுக்கும்...! ராகுல் காந்தி எச்சரிக்கை..!
இதை அடுத்து ஓம் பிர்லாவை காங்கிரஸ் எம்பிக்கள் முற்றுகையிட்டனர். இந்த நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை அவரது அறிக்கை சென்று காங்கிரஸ் எம்பிக்கள் முற்றுகையிட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். அவதூறு குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதாக ஓம் பிர்லாவை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: டிக்..டிக்..டிக்...! வெடிச்சு சிதற போகுது... பார்லிமென்ட்க்கு வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு..!