×
 

சொந்த வீடு கனவு நனவாகும் நேரம்! தமிழகத்தில் 25 ஆயிரம் பேருக்கு அடிக்கப் போகும் யோகம்! ரூ.2.50 லட்சம் மானியம்!

இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒரு வீட்டுக்கான மொத்த செலவில் ரூ.2.50 லட்சத்தை மத்திய அரசு மானியமாக வழங்கும். மீதமுள்ள தொகையை தமிழக அரசு வழங்கும் என நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழகத்தில் சொந்த வீடு இல்லாமல் தவிக்கும் ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நகர்ப்புற மக்களுக்கு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது. பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், தமிழகத்தில் 25 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு சொந்த வீடு வழங்கும் நோக்கத்தில் மத்திய அரசு பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு இரண்டாம் கட்ட திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த இரண்டாம் கட்டத்தில் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகள் கட்ட ரூ.2.50 லட்சம் கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 5,206 நகரங்களில் 71.55 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்! மீனவர்களுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை! புதிய திருப்பம்!

தமிழகத்தை பொறுத்தவரை, 722 நகரங்களில் மொத்தம் 25 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. ஒவ்வொரு வீடும் சுமார் 300 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இதனால் நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாமல் வசிக்கும் தகுதியான ஏழை குடும்பங்களுக்கு வீடு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒரு வீட்டுக்கான மொத்த செலவில் ரூ.2.50 லட்சத்தை மத்திய அரசு மானியமாக வழங்கும். மீதமுள்ள தொகையை தமிழக அரசு வழங்கும் என நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் வீடுகள் கட்டும் முறையிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. வழக்கமான கட்டுமான முறைக்கு பதிலாக, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வீடுகளை விரைவாகவும், தரமான முறையிலும் கட்டுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இந்த வீடுகள் கட்டப்பட உள்ளதால், சொந்த வீடு இல்லாத நகர்ப்புற ஏழை மக்களிடையே இத்திட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டத்தில் யார் பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவார்கள், விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் போது தெரியவரும்.

இதையும் படிங்க: 6 மாவட்டங்களில் இன்று அடிச்சு ஊத்தப்போகும் மழை..!! லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share