“ஏய் இருடா... நீ வந்து பேசுடா...” - பாமக தொண்டரின் செயலால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அன்புமணி ராமதாஸ்...!
8000 காகித கூப்பன் கொடுக்கின்ற திமுக வேண்டுமா? பத்தாயிரம் வங்கியில் கணக்கில் செலுத்தும் எடப்பாடி யார் வேண்டுமா?
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆபாசம் அவர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று மாலை பிரச்சார மேற்கொண்டார்.
அப்போது திறந்த வேனில் பேசிய அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார் 420 திமுக கள்ளச்சாராய திமுக கஞ்சாவிற்கென்று திமுக பெண்களை மானபங்கம் செய்கின்ற திமுக குழந்தைகளை கொலை செய்கின்ற திமுக ஊழல் செய்கின்ற திமுக என தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த தேர்தல் ஆனது ரிஷிவந்தியம் தொகுதிக்கான தேர்தல் மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கான முக்கியமான தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களையும் பெண்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன் பெற்றோர்களை கேட்டுக்கொள்கிறேன் தயவு செய்து இந்த தேர்தலில் எங்களுக்கு வாக்களியுங்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் இந்த ஐந்து ஆண்டு காலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்கள் பெண்களை கெடுத்து கொலை செய்கின்ற இந்த கேடுகெட்ட திமுகவை துரத்தி அடிக்க வேண்டும்.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த 17 வயது சிறுமி... கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிய முயன்ற இளைஞன் கைது...!
நான் இரண்டு பெண் பிள்ளைகளை பெற்ற அப்பா என்ற முறையில் ஆதங்கத்தில் கேட்கிறேன். இரண்டரை வயது குழந்தையை திமுக மாவட்ட இளைஞரணி நிர்வாகி கெடுத்து கொலை செய்துள்ளான் மதுராந்தகத்தில் 14 வயது சிறுமியை இரண்டு பேர் போதை உட்கொண்டே கஞ்சாவில் கெடுத்துள்ளனர் ஆறு மாதத்திற்கு முன் கும்மிடிப்பூண்டியில் 8 வயது குழந்தையை காணாமல் போய் மூன்று மணி நேரத்தில் ரத்த காயத்துடன் ஒரு கொடூரன் அந்த குழந்தையை கெடுத்துள்ளான் இப்படி பெண்களை கெடுத்து கொலை செய்யும் இந்த மானங்கெட்ட திமுக ஆட்சியை துரத்தி அடிக்க வேண்டும் இதை அனைத்தையும் பெற்றோர்கள் தாய்மார்கள் நினைவில் வைத்துக் கொண்டு இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.
கள்ளக்குறிச்சியை மாவட்டமாக பிரித்துக் கொடுத்தது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கள்ளக்குறிச்சி மாவட்டம் என்றாலே "க" தான். கள்ளச்சாராயம் பிடித்து இந்த மாவட்டத்தில் 67 பேர் உயிரிழந்துள்ளனர் அதில் 63 பேர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் இது ஒரு "க".அந்த கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தது முக்கிய குற்றவாளியான கண்ணுகுட்டி அது ஒரு "க".மற்றொரு கா திமுக வேட்பாளரான கார்த்திகேயன் இந்த கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போன கார்த்திகேயன் ஒரு "க" என்றார்.
இந்த ரிஷிவந்தியம் தொகுதியில் பத்தாண்டுகள் திமுக எம்எல்ஏவாக வசந்தம் கார்த்திகேயிலிருந்தும் எந்த ஒரு வளர்ச்சியும் பெறவில்லை இந்த தொகுதியில் அவர் கொள்ளை அடித்து தொகுதியில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களின் அதிகாரத்தை இந்த எம்எல்ஏ எடுத்துக் கொண்டார். திருவண்ணாமலையில் உள்ள ஊழல் பெருச்சாளி எ.வ. வேலு வின் பினாமி இவர். பீகார், சட்டீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தான் இவை கேள்வி பட்டிருக்கிறோம் இதை எல்லாம் இதை எல்லாம் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
இந்த பகுதியில் உள்ள திமுகவினரே அவரை தோற்கடித்து விடுவார்கள். திமுகவினருக்கு அவர் மீது அவ்வளவு கோவம் உல்லது. இந்த மாவட்டத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய உயிரிழப்பு இல்லை, அது கொலை என்ரார். அதை தட்டிக்கேட்ட என் மீது அவதூறு வழக்கு போடுவதாக மிரட்டுகிறார்கள், அதற்கு எல்லாம் நான் பயப்படுகிற ஆள் இல்லை என்றார். ஆனால் நான் கள்ளச் சாராய விவகாரத்தில் CBI விசாரணை வேண்டும் என வழக்கு தொடுத்துள்ளேன். இன்னும் இரண்டு மாதத்தில் இரிஷிவந்தியம் சங்கராபுரம் MLAக்கள் ஜெயிலுக்கு போவது உறுதி.
எனவே அவர்களுக்கு வாக்களித்து உங்களது வாக்கை வீணாக்க வேண்டாம் என்றார். நெல்லுக்கு 3500 ஆதார விலை தருவதாக அதிமுக கூறி உள்ளது. விவசாயிகள் நமக்கு சோறு போடுகின்ற கடவுள் அவர்கள் மீது திருவண்ணாமலை சட்டத்தில் கைது செய்துள்ளார். நாட்டில் உள்ள விவசாயிகளை எதுவும் செய்யவில்லை ஆனால் இங்கு இருக்கின்ற திருவண்ணாமலை வேலு விவசாயிகளை குண்டச்சட்டத்தில் போட்டு உள்ளார். அவரை மன்னிக்க கூடாது, அவரது பினாமியான ரிஷிவந்தியம் திமுக வேட்பாளரையும் மன்னிக்க கூடாது. ஐந்தாண்டு கால ஆட்சி செய்த முதல்வர் செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேட்க வேண்டும்.
ஆனால் அவர் எந்த சாதனையும் செய்யவில்லை அதனால் தான் அதனை சொல்லி கேட்க முடியவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 8000 கூப்பன் கொடுப்போம் என திமுகவினர் வாக்கு சேகரிக்கிறார்கள், அந்த கூப்பன் வாங்குவதற்கு திமுக காரனுக்கு 3000 லஞ்சம் வழங்க வேண்டும் அதேபோல் அந்த கூப்பனையும் திமுக காரர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமே வழங்குவார்கள் உங்களுக்கு வழங்க மாட்டார்கள் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி 10,000 உங்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துகிறேன் என்றார். 8000 கூப்பன் காகிதம் வேண்டுமா வங்கிக் கணக்கில் 10 ஆயிரம் வேண்டுமா என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.
பள்ளியில் மாணவர்களுக்கு ஒரு வாத்தியார் வேலை செய்கிறார் ஆனால் டாஸ்மார்க் கடையில் மதுபானம் விற்பதற்கு ஐந்து நபர்கள் வேலை செய்கின்றனர் இதுதான் திமுக ஆட்சி என்று மக்கள் சிந்தித்து ரிஷிவந்தியம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் செழியனுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சார நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது
இதையும் படிங்க: அண்ணாமலையை கைவிட்ட குலசாமி & பழனிசாமி... தேர்தலில் இருந்து விலகிய பரபரப்பு பின்னணி...!