×
 

“இரட்டை இலை கிடையாது; அது பாஜகவுக்கு அடிமையான ஒற்றை இலை” - அதிமுகவை தெறிக்கவிட்ட கருணாஸ்...!

200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெற்றி பெறும் இரட்டை இலை கிடையாது அவை ஒற்றை இலை பாஜகவுக்கு அடிமையாகிப் போன ஒற்றை இலை

 தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது இதனையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் நடிகருமான கருணாஸ், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்பொழுது, நிச்சயமாக நான் உதயசூரியன் சின்னத்திலே நின்று வெற்றி பெற்று, அந்த வெற்றியை மாண்புமிகு தமிழக முதலமைச்சரிடத்திலே ஒப்படைப்பேன் என்ற உறுதிமொழியையும் இந்த இடத்திலே இருந்து நான் தெரிவித்துக் கொள்வதிலே மகிழ்ச்சியடைகிறேன்.அதெல்லாம் எதுவுமே கிடையாது. நொங்கு நொங்கு என்ன தொங்கு, யாரு சொல்றாங்க? 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலே அமோகமாக வெற்றி அடையப் போகுது இந்த கூட்டணி. ஒரு மதச்சார்பற்ற கூட்டணி. இன்றைக்கு இந்தியாவே உற்றுநோக்கக் கூடிய பல திட்டங்களை மக்களால் வரவேற்கத்தக்கது. இல்லத்தரசிங்கிற ஒரு திட்டம் போதும், 2026-ல 200-க்கும் மேற்பட்ட சீட்டுகளோடு வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தினுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமர்வார்.


முதல் முறையா நீங்க வந்து இரட்டை இலையில நின்று ஜெயிச்சீங்க. ஆமா. இப்ப அந்த இரட்டை இலையை எதிர்த்து நீங்க திமுகவில நிக்கிறீங்க. அதை எப்படி...? அந்த இரட்டை இலை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அம்மாவும் உருவாக்கி வளர்த்த ஒரு இரட்டை இலை. இது வந்து ஒற்றை இலை. இது வந்து மொத்தமாக அடமானம் போன பாஜக கிட்ட அடிமாட்டு விலைக்குப் போன ஒரு ஒற்றை இலை. அதனால அது வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே கிடையாது. அதையும் தாண்டி மதச்சார்பற்ற ஒரு கூட்டணி, மதத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கக்கூடிய ஒரு கூட்டத்தை எதிர்க்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நம்ம இங்க இருக்கிறோம். ஒரு பாசிச சித்தாந்தத்தோடு தமிழகத்துக்குள்ளே ஏதாவது ஒரு முகத்தில, ADMK மாதிரியான கட்சிகளை கபலிகரம் செய்து, மோடி, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள் தமிழ்நாட்டுக்குள்ள வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலே நாங்கள் அந்த இயக்கத்திற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து நாங்கள் பிரச்சாரம் செய்தோம்.

இதையும் படிங்க: மானம் கெட்ட மதுபிரியரே உனக்கு என்ன வேலை? - கருணாஸுக்கு எதிராக சிவகங்கையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!


அந்த அடிப்படையிலே எங்களுடைய நோக்கம் வந்து மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற வேண்டும். எந்த ரூபத்திலும் பாசிச சித்தாந்தங்கள், ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள் தமிழகத்திலே ஊடுருவிடக் கூடாது. அதுவும் இது போன்ற சிவகங்கை மண் போன்ற ஒரு தியாக மண்ணுக்குள்ளே, இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்திலே சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் ஐஎன்ஏ ஆரம்பித்து, வெள்ளையனை எதிர்த்து சண்டை போடத் தயாராக இருந்த நேபாளம் வழியாக உள்ளே நுழைந்த பொழுது, இதே ஆர்எஸ்எஸ்-ஐ உருவாக்கிய வீர சாவர்க்கருடைய குழுக்கள்தான் அதுக்குத் தடையாக இருந்து வெள்ளையர்களோடு கூட்டுச் சதி செய்தார்கள். வெள்ளையர்களோடு கூட்டுச் சதி செய்த ஒரு கூட்டம் இன்றைக்கு நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. அதுவும் எங்களுடைய மன்னர்கள், எங்களுடைய முன்னோர்கள் முத்துவடுகநாதர் முதற்கொண்டு, வீரபாண்டிய மருது சகோதரர்கள் முதற்கொண்டு உயிர் தியாகம் செய்த ஒரு மண் சிவகங்கை மண். அந்த மண்ணிலே எப்படி ஒரு ஆர்எஸ்எஸ் சித்தாந்த கூட்டத்தை எப்படி நம்ம உள்ள நுழைய விடுறது?


ஆகவே வரக்கூடிய இந்த 26 தேர்தலிலே முதலமைச்சர் எண்ணற்ற நலத்திட்டங்களை இன்றைக்கு அறிவித்திருக்கிறார்கள் தேர்தல் அறிக்கையிலே. இல்லத்தரசிகள் திட்டத்திற்கான அந்த 8,000-மா 9,000-மா? அந்த 8,000 ரூபாய்க்கான கூப்பன் குடுக்குறாங்க இல்லத்தரசிகள் திட்டம். அது மகத்துவமான திட்டம். அது மக்களிடத்திலே மிக ஆதரவு பெற்றிருக்கிறது. ஆகவே கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த, செயல்படுத்திய வெற்றிகரமான திட்டங்களைச் சொல்லி மக்களிடத்திலே வாக்கு கேட்டு நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

யாரு சொன்னது? இல்ல எல்லா அரசியல் கட்சிக்காரர்களும் சொல்றாங்க, தொடர்ந்து இரண்டாவது முறையாக என்றைக்குமே ஆட்சி... அவங்க அந்த மாதிரி சொல்றவங்க எல்லாருமே நல்லா புரிஞ்சுக்கோங்க. 1967-ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உருவான பொழுது, அவருடைய மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அடுத்து நடந்த 1971 தேர்தல்ல போட்டியிட்டு வெற்றி பெற்றாரா இல்லையா? அப்ப 1967-லிருந்து 1977 வரைக்கும் ஆட்சி செஞ்சது யாரு? திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சிதானே! அதே ஆட்சி மீண்டும் 2021-லே தொடங்கிய வெற்றி முதலமைச்சர் அண்ணன் மு.க. ஸ்டாலினுடைய ஆட்சி இந்த 2026-லயும் தொடரும். கடந்த தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் நிச்சயமாக இவர் தலைமையிலே இந்த ஆட்சி அமையும்.

இதையும் படிங்க: பொண்டாட்டி, பிள்ளைங்க போனாலும் பரவாயில்லன்னு கவுந்து படுத்துக்கிட்டு... விஜய்யை கிழித்து தொங்கவிட்ட கருணாஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share