தவெக ரொம்ப ஸ்டிரிக்ட்; காலில் விழுந்தால் நடவடிக்கை... புது ரூல்ஸ் போட்ட புஸ்ஸி ஆனந்த்!!
போலீஸ் பிடித்து அபராதம் போட்டால் அரசு மீதுதான் கோபப்பட வேண்டும் என தவெக தலைவர் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதை தொடர்ந்து பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்தது விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார். ஒருபுறம் நடிகர் விஜய் படப்பிடிப்பில் இருந்தாலும், மறுபுறம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடர்ச்சியாக கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரியில் தவெக சார்பில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
இதையும் படிங்க: தீயாய் வேலையை ஆரம்பித்த விஜய்... தவெக மருத்துவர் அணிக்கு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..!
அப்போது பேசிய அவர், மகளிருக்கு ரூ.1000 அரசு கொடுக்கிறது. ஆனால் என் கணவன் கூடா நான் வெளியில் போனால் லைசன்ஸ் இல்லை, ஹெல்மெட் இல்லைனு அபராதம் போட்டு அந்த ஆயிரம் ரூபாயை வாங்கிவிடுகிறார்கள். வாகனம் ஓட்டும்போது லைசன்ஸ், ஹெல்மெட் இல்லை என்பதற்காக போலீஸ் பிடித்து அபராதம் போட்டால், நீங்கள் போலீஸ் மீது கோபப்பட கூடாது, அரசு மீதுதான் கோபப்பட வேண்டும்.
யாரும் என் காலில் விழ வேண்டாம் அப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தளபதியை தாண்டி எங்களுக்கு எதுவும் தெரியாது. உயிர், மூச்சு, நாடி அனைத்தும் தளபதி தான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கடந்த 32 ஆண்டுகளாக தளபதிக்காக பொதுமக்களுக்கு சேவையாற்றிக்கொண்டிருக்கும் கட்சி தவெக. தளபதி சொல்வதெல்லாம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றுதான் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழர்களின் உணர்வுடன் விளையாடுகிறது பாஜக... கீழடி விவகாரத்தில் சீறிப்பாய்ந்த தவெக நிர்வாகி!!