×
 

நான் பண்ணது தப்புதான்! மனசுக்குள்ள சின்ன வருத்தம் இருக்கு!! புதுச்சேரிக்கு ராகுல்காந்தி செய்து கொடுத்த ப்ராமிஸ்!

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 6 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

புதுச்சேரிக்கு அடிக்கடி வராதது தவறு என்று ஒப்புக்கொண்ட ராகுல், “இங்கு வரும்போது என் மனதில் சிறு வருத்தம் ஏற்படுகிறது. இந்த மாநிலம் டில்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆளப்படுகிறது. பாஜகவின் கொள்கைகளை புகுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, புதுச்சேரி மக்களின் எண்ணங்களையும், விருப்பங்களையும் நிறைவேற்றும் அரசாக இது இல்லை” என்றார்.

துணைநிலை ஆளுநரை வைத்து மாநிலத்தை ஆட்டிப்படைப்பதாகவும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். “பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. தொழில்துறை நசுக்கப்படுகிறது. புதுச்சேரியை அதானிக்கு விற்க பாஜக முயற்சி செய்கிறது. காரைக்கால் துறைமுகம் ஏற்கனவே அதானிக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டது. மின்வாரியமும் அதானிக்கு விற்கப்பட உள்ளது” என்று ராகுல் தெரிவித்தார்.

போலி மருந்துகள் தயாரிப்பு அதிகரித்து வருவதைத் தடுக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் 30 சதவீதம் கமிஷன் பெறப்படுவது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: ஒரே நாளில் புதுச்சேரி செல்லும் மு.க.ஸ்டாலின் - ராகுல்காந்தி!! ஒரே மேடையில் பிரசாரம் சாத்தியமா?!

பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மதுக்கடைகள் திறக்க அனுமதிப்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும் ராகுல் விமர்சித்தார்.

“புதுச்சேரியில் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஊழல் நடக்கிறது. எங்களைப் பொறுத்தவரை துணைநிலை ஆளுநர் மன்னர் போல செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. புதுச்சேரியின் மண்ணின் மைந்தர்கள் ஆள வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு” என்று வலியுறுத்திய ராகுல், ஆட்சிக்கு வந்தவுடன் 6 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

மேலும், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை, அரசு மற்றும் தனியார் துறையில் 30,000 வேலைவாய்ப்புகள், புதுச்சேரி பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம், அரசு வேலைக்கான வயது உச்சவரம்பை 40ஆக உயர்த்துதல், ஒரு குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு ஆகியவற்றையும் அவர் அறிவித்தார்.
 

இதையும் படிங்க: சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share