வளர்த்த கடா மார்பில் பாய்கிறது..! அன்புமணிக்கு பாடம் புகட்டிய ராமதாஸ்..!
வளர்த்த கடாவே மார்பில் பாய்ந்ததாக அன்புமணி குறித்து ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நான் என்ன தவறு செய்தேன் என்ற அன்புமணியின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக கருத்துகளை எடுத்துரைத்தார். தான் செய்த தவறுகளை மறைத்து மக்களை அன்புமணி திசை திருப்புவதாகவும், மேடை நாகரிகம், சபை நாகரிகத்தை கடைப்பிடிக்காதவர் அன்புமணி என்றும் கூறினார்.
பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொண்டது யார் என்றும் கேள்வி எழுப்பிய ராமதாஸ், கசப்பான வார்த்தைகளை பதிலாக கொடுக்கும் நிலை தனக்கு ஏற்பட்டுள்ளது என்றும் பாமகவினரையும் மக்களையும் திசைதிருப்ப அன்புமணி முயற்சிக்கிறார் எனவும் குற்றம் சாட்டினார். அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராகியது என் தவறு., எனக்கூறிய ராமதாஸ், நான்கு சுவற்றுக்குள் பேசி முடிக்க வேண்டியதை நடு வீதிக்கு கொண்டு வந்தது யார் என்றும் முகுந்தன் இளைஞரணி தலைவராக அறிவிக்கப்பட்ட போது மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது சரியான செயலா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: அம்மவைவிட மகள் மூத்தவராக இருக்க முடியுமா.? கமலுக்கு ஆதரவாக அன்புமணி ஆவேசம்!
அன்புமணி ராமதாஸ் இன்னும் பக்குவப்படவில்லை என பலரும் வருந்தியதாகவும், கட்சியின் கட்டுப்பாட்டிற்கு களங்கத்தை அன்புமணி ஏற்படுத்தி விட்டதாகவும் எதிர்பாராத வகையில் வளர்த்த கடாவை மார்பில் வீறு கொண்டு பாய்வதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குவாரிகளே வேண்டாம்! தமிழக அரசு பச்சை பொய் சொல்கிறது... சுற்றுச்சூழல் ஆணையருக்கு அன்புமணி பரபரப்பு கடிதம்!