அம்மா மேல பாட்டிலை தூக்கி வீசிட்டான் - அன்னைக்கே நான் செத்துட்டேன் - அன்புமணியால் கலங்கிப்போன ராமதாஸ்..!
பாஜகவுடன் கூட்டணி என்பதற்கான ஏற்பாட்டினை செளமியா அன்புமணி தயார் செய்து விட்டார்; அதன் மூலம் மறு நாள் காலையில் அண்ணாமலை கூட்டணி பேச வந்துவிட்டார். இது தனக்கு தெரியாமலையே நடந்தது என ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அனைவரும் பெற்ற தாயை கடவுள் என்போம். இந்தாண்டு பொங்கல் சமயத்தில் குடும்பத்துடன் அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது உனது இரண்டாவது மகளை இளைஞர் அணி தலைவராக்கி இருந்தால் நீ சும்மா தானே இருந்திருப்பாய்? என அன்புமணியின் தாயார் கேட்டபோது, அமர்ந்திருந்த இடத்தில் இருந்த பாட்டிலை தூக்கி பெற்ற தாயின் மீது வீசியவர் அன்புமணி நல்ல வேலையாக அது அவரின் மேல் படாது சுவற்றில் பட்டது. இதெல்லாம் வெறும் சேம்பிள் தான். இது பொங்கல் நேரத்தில் தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது எனக்கூறியிருக்கார்.
தொடர்ந்து பேசிய அவர், மாவீரன் குருவை அன்புமணி கீழ் தரமாக நடத்தியது ஏற்று கொள்ளதக்கது அல்ல என ராமதாஸ் தெரிவித்துள்ளார். தலைமை நிர்வாக குழுவில் யாரையும் பேச விடுவதில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக தர்மபுரி, சேலத்திற்கு சென்று வந்தேன். தர்மபுரிக்கு சென்றால் மைக் வைத்து பேச கூடாது. இருநூறு பேருக்கு மேல் கூட கூடாது என அன்புமணி தெரிவித்தார். கட்சியை ஆரம்பித்த தனக்கு பல கட்டளைகளை அன்புமணி கொடுத்தார். யார் உழைத்து, வளர்த்த கட்சி யார் உழைத்து வளர்த்த கட்சி சோறு தண்ணி இல்லாமல் பல கிராமங்களுக்கு சென்று வந்தேன். மாவீரன் குருவை அன்புமணி கீழ் தரமாக நடத்தியது ஏற்று கொள்ளதக்கது அல்ல. இதையெல்லாம் பார்த்த தான் நிர்வாக குழுவில் அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என கூறினேன் என்றார்.
இதையும் படிங்க: ஞானசேகரனுக்கு துணைபோனவர்களை தண்டிக்க வேண்டாமா.? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்.!!
பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி நிறுவனர் ராமதாசுக்கும், செயல் தலைவரான அன்புமணிக்கும் வெடித்த மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் மாமல்லபுரம் வன்னிய இளைஞர் மாநாடு முடிந்தவுடன் தனது பலத்தை கட்சியினருக்கு நிரூபிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட செயலாளர், மகளிர், இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ககூடாது என ஒருவர் போன் செய்து மாவட்ட செயலாளர்களை மிரட்டுவதாக ராமதாஸ் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது அது அன்புமணி ராமதாஸ் எனத் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு ராமதாஸ் அளித்த பேட்டியில், “என் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க கூடாது என்று நிர்வாகிகளுக்கு, போன் செய்து அன்புமணி வராமல் தடுத்து விட்டார். அன்றே நான் செத்து விட்டேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரு மாசமா மன உளைச்சல்; தூக்கம் இல்லை.. பொதுக்கூட்டத்தில் புலம்பி தள்ளிய அன்புமணி!!