×
 

டிடிவி தினகரனை சந்தித்தது உண்மையா? - சஸ்பென்ஸை உடைத்த செங்கோட்டையன்....!

சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்.

சென்னையில் இருந்து கோபியில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது: என்னுடைய மனைவி சென்னையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். நேற்றைய தினம்  அவரை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்று இருந்தேன். சென்னை சென்றவுடன் என்னுடைய சொந்த வேலையை பார்த்துவிட்டு இன்று வீடு திரும்பியிருக்கிறேன். நேற்று அரசியல் ரீதியாகவும் மற்ற ரீதியாகவும் நான் சந்திக்கவில்லை. அதுபோன்ற தவறான செய்திகள் வந்தவுடன் பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு இது குறித்து தெரிவித்து இருந்தேன்.

என்னைப் பொறுத்தவரையில் இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும், அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் இருக்கிறது. எம்ஜிஆரின் கனவு, ஜெயலலிதா சட்டமன்றத்தில் உரையாற்றும் பொழுது 100 ஆண்டு காலம் இந்த இயக்கம் நிலைத்திருக்கும் என்று கூறினார். அந்த கனவை நிறைவேற்றுவதற்கு பல்வேறு தியாகங்களை செய்து தொண்டர்கள் உள்ள இந்த இயக்கத்தை உயிர்மூச்சாக, எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் இந்த இயக்கம் வலிமை இரண்டு நோக்கத்தோடு தான் அன்று எனது கருத்தை தெரிவித்து இருந்தேன்.

என்னை பொறுத்த வரையில் குறிக்கோள் ஒன்றுதான், அந்த குறிக்கோளின் அடிப்படையில் நேற்று யாரையும் சந்திக்கவில்லை.  அரசியல் ரீதியாக யாரிடத்தில் நான் பேசவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன் எனக்கூறினார்.

இதையும் படிங்க: கொங்கு மண்டலமே அதிரப்போகுது... அறிவாலயத்தில் ஐக்கியமாகும் அடுத்த அதிமுக முக்கிய புள்ளி... அதிர்ச்சியில் எடப்பாடி...! 

ஒருங்கிணைப்பு பணி எந்தளவிற்கு உள்ளது என்ற கேள்விக்கு,  பல்வேறு நண்பர்கள் என்னிடத்தில் பேசுகிறார்கள் ஒருமித்த கருத்துக்கள் அவர்கள் மனதில் இருக்கிறது. யார் என்னிடத்தில் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். அதை தற்போது கூற இயலாது. ஆகவே எல்லோருடைய உள்ளங்களிலும் இருப்பது அதுதான் இன்று வரை நான் சொன்ன செய்திகளை ஆன்ட்டி கமெண்ட்ஸ் என்று சொல்வார்கள் அது  யாரிடத்திலும் இதுவரை கொடுக்கப்படவில்லை.

 எல்லோருடைய மனதிலும் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும் என்ற மணலை இருக்கிறது என்பது எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஓபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர்பு கொண்டார்கள் தொடர்பு கொண்டார்களா  என்பதை சொல்வது சரியாக இருக்காது. யார் பேசினார்கள் யார் பேசவில்லை என்பது இப்போது சொல்வதற்கு வாய்ப்பு இல்லை.

 தேர்தலுக்கு முன்னாடி இந்த பணி முடிவடையுமா என்ற கேள்விக்கு,  நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் யாரையும் சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை.. வாய்ப்பு இருந்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்றார்.

இதையும் படிங்க: “அதை போய் செங்கோட்டையன் கிட்ட கேளுங்க”... செய்தியாளர்களிடம் டென்ஷனின் உச்சத்திற்கு சென்ற அதிமுக எம்.எல்.ஏ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share