FIR- ல் என் பெயரை இல்ல..! எத்தனை CASE போட்டாலும் போராடத் தயார்..! செந்தில் பாலாஜி திட்டவட்டம்..!!
காவல் நிலையத்தில் போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. தமிழக வெற்றிக் கழக சட்டப்பேரவை உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரைப் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் அவர் மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் இருவரும் தினந்தோறும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த உத்தரவின்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பிணை செலுத்திய பிறகு, ஜூலை 25 முதல் செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திடத் தொடங்கினார். அவரது சகோதரரும் உடன் ஆஜராகி வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக செந்தில் பாலாஜி கையெழுத்திட செல்லவில்லை. டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் காவல் நிலையத்தில் கையெழுத்திட செல்லாமல் இருந்தார். இரண்டு நாட்கள் கழித்து இன்று மீண்டும் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்துருவதற்காக சென்றார்.
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, குதிரை பேர வழக்கில் எவரில் தனது பெயர் இல்லாத போதிலும் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். புகாரர் அளித்த புகாரிலும் தனது பெயர் இல்லாத நிலையில் பெயர் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதலாக வழக்குப்பதிந்து தான் தங்கி இருந்த அறையில் சோதனை நடத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: 2 நாள் லீவ்..! மீண்டும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்..! சர்ச்சைக்கு DOT..!
கைது செய்யப்பட்டதில் ஒருவர் பெயர்தான் எஃப் ஐ ஆர் இருக்கிறது என்றும் மற்றொருவரின் பெயர் இல்லாதபோதும் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார். மக்கள் அடிப்படை தேவையை நிறைவேற்றாமல் வழக்கு போடுவதில் மட்டும் தமிழக வெற்றிக்கழக அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். ஆக்கப்பூர்வமான அரசு மக்களின் குறைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். எத்தனை வழக்கு போட்டாலும் சட்டப்படி நீதிமன்றத்தில் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம் எனவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்... டாஸ்மாக் மோசடி வழக்கில் திடுக் திருப்பம்... அடுத்த முக்கிய புள்ளி தலைமறைவு?