செந்தில்பாலாஜி ஜாமினால் முதல்வர் விஜய்க்கு சிக்கல்! கரூர் பயணத்தில் காத்திருக்கும் செக்!
₹35 கோடி குதிரை பேர விவகாரம் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது. மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் பெற்றது தற்போது முதல்வர் விஜய்க்கு சிக்கலாக முடிந்துள்ளது.
சென்னை: ₹35 கோடி குதிரை பேர வழக்கில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்ஜாமீன் வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழக வெற்றி கழகம் தரப்பில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய்க்கு இது பெரிய அரசியல் சிக்கலாக மாறியிருக்கிறது.
தவெக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவை விலைக்கு வாங்க முயன்ற வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆர்.வி. அசோக் குமார் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இந்த விவகாரம் தவெக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முதல்வர் விஜய் இந்த தீர்ப்பால் கடும் வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூரில் பிரம்மாண்ட வரவேற்புடன் முக்கிய அரசியல் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த விஜய், செந்தில் பாலாஜியை அங்கு கைது செய்யும் வியூகத்தை வகுத்திருந்தார். ஆட்சியை கலைக்க சதி தீட்டியதாகவும், சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்!! திரைமறைவில் கரூர் கம்பெனி! சிக்கும் செந்தில்பாலாஜி?!
₹35 கோடி லஞ்சப் பேரத்தில் முக்கிய பங்கு வகித்ததாக சொல்லப்படும் செந்தில் பாலாஜியை கைது செய்து அரசியல் அடியை கொடுக்க விஜய் தரப்பு தயாராக இருந்தது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பு இந்த திட்டத்தை முழுமையாக மாற்றியமைத்துவிட்டது.
நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நடைபெற்ற விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யான் கடுமையான வாதங்களை முன்வைத்தார். இது சாதாரண வழக்கல்ல, ஆட்சியை கவிழ்க்க ஹவாலா பணத்தை பயன்படுத்திய பெரிய சதி என்றும், எம்எல்ஏவுக்கு ₹35 கோடியும் இடைத்தரகருக்கு ₹5 கோடியும் பேசப்பட்டதாகவும் தெரிவித்தார்.
எஃப்.ஐ.ஆரில் போதிய ஆதாரங்கள் இல்லை, அரசியல் பழிவாங்கல் என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. இறுதியில் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
இந்த சறுக்கல் விஜய்க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சிங்கப்பூருக்கு தப்பிய முக்கிய குற்றவாளியை பிடிக்கவும், ஹோட்டல் சிசிடிவி உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களை வலுப்படுத்தவும் தவெக தரப்பு சட்ட ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கரூர் பயணம் தொடரும் என்றாலும், திட்டமிட்ட கைது நடவடிக்கை தோல்வியில் முடிந்தது விஜய் தரப்புக்கு பெரும் ஏமாற்றம். தமிழக அரசியலில் குதிரை பேர விவகாரம் இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்!! செந்தில் பாலாஜி திட்டம் அம்பலம்?! பரபரப்பு வாக்குமூலம்!