“புண்ணியவான் ஸ்டாலின் சொன்னான்... அம்போன்னு விட்டுட்டான்...” - முதலமைச்சரை ஒருமையில் விமர்சித்த ஸ்ரீதர் வாண்டையார்...!
எனக்கு சீட்டு தரேன்னு சொல்லி என்னை அம்போன்னு விட்டுட்டாங்க மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பேச்சு
எனக்கு சீட்டு தரேன்னு சொல்லி என்னை அம்போன்னு விட்டுட்டாங்க அவர்களை பழிவாங்க இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பேச்சு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேருந்து நிலையப் பகுதியில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராகேஷை ஆதரித்து மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் உங்களுக்கு எல்லாம் தெரியும் நான் எவ்வளவு நல்லவனு...எனக்கு சீட் கொடுக்கனும்ல...கொடுக்கனுமா... இல்லையா...போன வாட்டி எம்.பி தேர்தலில் எம்.பி சீட்டு கொடுங்கன்னு கேட்டேன். வேண்டாம் அது டெல்லிக்கு போக வேண்டும். நீங்கள் தமிழ்நாட்டு தலைவர் தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களை நன்கு தெரியும். நீங்க நல்ல சட்டமன்றத்தில் நில்லுங்க, எந்த தொகுதி கேட்டாலும் கொடுக்கிறோம், அப்படின்னு சொன்னான் புண்ணியவான் ஸ்டாலின். ஆனால் விட்டாண்டா என்ன அம்போன்னு விட்டுட்டாங்க. எனக்கு சீட்டே கொடுக்கல, என்னன்னு கேட்டா தேமுதிக கூப்பிடுறாங்க. பத்தாததுக்கு 10 சீட்டு கொடுக்குறாங்க. அவங்களுக்கு எதுக்கு 10 சீட்டுன்னு குடுத்தவங்களுக்கு தெரியாது. வாங்கின உங்களுக்கும் தெரியாது.
இதையும் படிங்க: சோம்பேறி, ஒழுக்கமில்லாதவர்... விஜயை சரமாரியாக சாடிய அர்ஜுன் சம்பத்...!
அதுமட்டும் இல்லாமல் 250 கோடி ரூபாய் பணம் வேற ராஜ்யசபா சீட்டு வேற. நானும், வேல்முருகனும் உங்களுக்காக கத்து கத்துன்னு கத்திட்டு இருக்கோம். ஆனா என்னையும் கழட்டி விட்டானுங்க. வேல்முருகனை கழட்டி விட்டுட்டாங்க, இதற்கெல்லாம் பழி வாங்கணுமா இல்லையா வாங்கணும் என்றால் இவரை ஜெயிக்க வைக்க வேண்டும். இவரை எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் நீங்கள் ஜெயிக்க வைக்கிறீர்களோ அவ்வளவு தூரம் நீங்கள் எனக்கு கை கொடுக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
முரடானா இருந்தேன்... இப்ப நல்லவனா மாறிட்டேன்.. அதனால தான் எனக்கு சீட்டு கொடுக்காம ஏமாத்திட்டாங்க... 71 வயசு இப்ப எனக்கு 71 வயசுல நான் எப்படி இருப்பேன்னு தெரியாது, உடம்பு மோசமாக போனாலும் போகலாம், இப்பவே எனக்கு சீட்டு கொடுத்தனும்ல, அப்பதான் நான் உங்களுக்கு வேலை செய்ய முடியும், நான் ஒரு மெம்பர் கிடையாது, நான் ஒரு வார்டு கவுன்சிலர் கிடையாது, நான் ஒரு எம்எல்ஏ கிடையாது, ஒரு எம்.பி கிடையாது, ஒரு மந்திரி கிடையாது, நான் உங்கள ஒருத்தன் உங்கள் குடும்பத்தில் ஒருவன் நான்
எடப்பாடி தான் நமக்கு சரியானவர், மோடி தான் ரொம்ப நல்லவர், இவரைப் போன்றவர் தான் நமக்கு எம்எல்ஏவாக வர வேண்டும், இவர்களை தான் நாம் வெற்றி பெற செய்ய வேண்டும் நமது சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையான ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவேன் என கூறியவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும், எனவே இந்த சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டு வாக்கு சேகரித்தார்.
இதையும் படிங்க: நள்ளிரவு முதலே அதிரடி உத்தரவு... இன்று முதல் எகிறப்போகும் மீன்களின் விலை... ஷாக்கில் மக்கள்...!