×
 

அதிக மகசூல் எடுத்தால் ரூ.2.50 லட்சம் பரிசு! நம்மாழ்வார், அஞ்சலையம்மாள் பெயரில் விருது! அசத்தல் அறிவிப்பு!

அதிக மகசூலை எட்டும் விவசாயிகளுக்கு வெற்றி விவசாய விருது வழங்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிக மகசூல் எட்டும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய "வெற்றி விவசாயி" விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 2026–27ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றிய வேளாண் துறை அமைச்சர் வினோத், இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்தத் திட்டம், அதிக விளைச்சலைப் பெறும் விவசாயிகளை அடையாளம் கண்டு அவர்களின் சாதனையை மாநிலம் முழுவதும் பாராட்டும் நோக்கில் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, நெல், சோளம், கம்பு, பருத்தி உள்ளிட்ட முக்கிய பயிர்களை குறைந்தது 2 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறும் விவசாயிகள் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு "வெற்றி விவசாயி" விருது வழங்கப்படுவார்கள். மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில அளவில் சிறந்த விளைச்சலைப் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் பெயரில் புதிய வேளாண் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.1.50 லட்சம் மற்றும் மூன்றாவது பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். மொத்தம் 10 பயிர்களுக்கு 30 பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக ரூ.50 லட்சம் பரிசுத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமித் ஷா வருகையால் தமிழகம்–புதுச்சேரியில் உச்சக்கட்ட பாதுகாப்பு! 3 நகரங்களில் பரபரப்பு! முழு விவரம்!

உயிர்ம உரங்களை பயன்படுத்தி இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கவுரவிக்கும் வகையில், நம்மாழ்வார் பெயரில் வழங்கப்படும் சிறப்பு விருதுகளுக்காக ரூ.11 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 9 முக்கிய பயிர்களுக்காக மொத்தம் 90 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்தப் போட்டிகளுக்கான பரிசுத் தொகையாக ரூ.67.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள், அதிக மகசூல் மற்றும் தரமான உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதிக விளைச்சலை நோக்கி விவசாயிகளை ஊக்குவிக்கும் இந்த அறிவிப்பு, மாநிலம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அலுவலக செலவு பல மடங்கு உயர்வு? அதிகாரிகள் மீது விழும் கூடுதல் சுமை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share