×
 

11,500 குழந்தைகளுக்கு இப்போவே ரெடி! தாய்மாமன் தங்க மோதிர திட்டம்! தயாராகிறது தகுதியானோர் லிஸ்ட்!

ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் பிரசவங்களையும் சேர்த்து கணக்கிடும்போது, இதுவரை 11,500-க்கும் மேற்பட்டோர் திட்டத்துக்கான பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

கோவை: தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் சீர்’ வழங்கும் வகையில் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், இதற்கான பயனாளிகள் விவரங்களை சுகாதாரத்துறை தீவிரமாக சேகரித்து வருகிறது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர். இதற்காக தாய்மார்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஏற்கனவே பராமரிக்கப்பட்டு வரும் பிரசவ விவரங்களின் அடிப்படையில் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதற்காக கர்ப்பிணிகளிடம் ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, பிக்மி எண் மற்றும் தாயின் வங்கிக் கணக்கு விவரங்கள் பெறப்படுகின்றன. குழந்தை பிறந்த பின்னர் மருத்துவமனை தரப்பில் வழங்கப்படும் டிஸ்சார்ஜ் விவரங்களும் இணைக்கப்பட்டு ஆவணங்கள் தயாராக வைக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: அரசு ஊழியர்கள் அலுவலகத்தில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் மாதத்திற்கு சுமார் 500 முதல் 550 பிரசவங்கள் நடைபெறுவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் பிரசவங்களையும் சேர்த்து கணக்கிடும்போது, இதுவரை 11,500-க்கும் மேற்பட்டோர் திட்டத்துக்கான பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினசரி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகள் பிறந்து வருவதால், பயனாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திட்டம் தொடங்கும் நாளில் தகுதியான பயனாளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை பிறந்தவுடன் தங்க மோதிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கும் குடும்பங்கள் மத்தியில் தற்போது கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டியதில்லை என்பதும் பயனாளிகளுக்கு கூடுதல் வசதியாக பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 15-ம் தேதி திட்டம் தொடங்கிய பிறகு, தங்க மோதிரம் வழங்கும் நடைமுறை அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நேபாள வெள்ளம்: முதல்வர் விஜய் உத்தரவில் தமிழர்களை மீட்க டெல்லியில் முகாமிட்ட 4 அமைச்சர்கள்! முக்கிய முடிவு?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share