×
 

ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

பாமக, பாஜக கட்சிகள் இருக்கும் இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்காது என்று நெய்வேலியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார்

கடலூர் மாவட்டம், நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள திடலில் திமுக வேட்பாளர் சபா.ராசேந்திரனை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்  பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர ஆசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சொந்த சின்னமான பானை சின்னத்தில் அங்கீகாரம் பெற்ற கட்சியாக உள்ளது.

அகில இந்திய அளவில் அம்பேத்கர் கொள்கையை கொண்ட நான்கு கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளது.

இதையும் படிங்க: திமுகவை வீழ்த்தி விஜய் முதலமைச்சர் ஆகிடுவாரா..? பெரம்பூர் வெற்றியே கேள்விகுறி தான்..! திருமா. விமர்சனம்..!

விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி தான் வெற்றி பெறும் என்ற வரலாறு படைத்து வருகிறது.

 தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சியாக வலு பெற்று உள்ளோம். இந்த சட்டப் பேரவை தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் காட்டுமன்னார்கோயில் (தனி), பண்ருட்டி (பொது) என இரண்டு தொகுதிகளை பெற்றுள்ளது. 

விசிக அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருப்பதற்கு துணையாக இருந்தது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான். விசிகவினரின் வாக்குகள் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினருக்கு சென்று சேர வேண்டும். 

விசிக வாக்குகள் விஜய் கட்சிக்கு சென்று விட்டதாக கூறுகின்றனர். விசில் அடிப்பவர்களை திரையரங்கிற்கு தான் அனுப்ப வேண்டும். சட்டப்பேரவைக்கு அல்ல.  விஜய் அரசியலுக்கு வரும்பொழுது நான்  தான் வரவேற்று வாழ்த்தினேன். ஆனால், அவரது நோக்கம் தற்போது சரியில்லை. அவர் திமுக மற்றும் கூட்டணி கட்சியினரை வீழ்த்துவேன் என கூறுகின்றார். 

விஜய், திமுக மற்றும் கூட்டணி கட்சியினரை தோற்கடித்து யாரை ஆட்சியில் அமர வைக்க போகிறார். நீங்கள் (விஜய்)ஆட்சி அமைக்க முடியாது. அப்போது, ஏன் திமுகவை வீழ்த்த நினைக்கிறீர்கள். திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு போகும் வாக்குகளை பிரித்து அதிமுக, பாஜகவை பயனடைய உதவுகிறார்.  

அதிக இடம் வேண்டுமென கூறி நான் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை.  நான் நினைத்தால் பாஜக, அதிமுக மற்றும் விஜயுடன் கூட்டணி சேர்ந்து இருக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக கூறியதை கேட்டிருப்பீர்கள். நான் ஆசைப்பட்டோ, அலைந்தோ இரண்டு பக்கம் கதவை திறந்து வைத்து பேச்சு வார்த்தை யாருடனும் நடத்தவில்லை. 

பாமக, பிஜேபி இருக்கும் இடத்தில் விடுதலை சிறுத்தைகள் இருக்காது. பாமக இல்லாத அதிமுகவுடன் செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால், நான் போகவில்லை. தமிழ்நாட்டில் பாஜக ஆட்டம் போடுவது தடுக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் ஜாதி, மத சண்டையை ஏற்படுத்த பாஜக ஆர்எஸ்எஸ் முயற்சிக்கின்றது. இந்த ஆட்சி வளர அதிமுக இடம் கொடுக்கிறது. அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. நாம் அரசியல் பேசும் கட்சிகளோடு விசிக கை கோர்த்து உள்ளது. 

கடலூர் கூட்டத்தில் பிரேமலதா அவமதித்துவிட்டதாக கொம்பு சீவி விடுகின்றனர். 
கடலூரில் நடந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் வேட்பாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும். நான் நமது கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய பொழுது மற்றவர்களும் எழுந்து நின்று விட்டனர். அங்கு பிரேமலதா எழுந்திருக்க வேண்டியதில்லை. இதை வைத்து அதிமுக, பாஜக உள்ளிட்ட சில கும்பல் அற்பமான அரசியல் செய்கின்றனர்.

 கூட்டணி கட்சிகளுக்கு விசிக வாக்குச் செல்லக்கூடாது என்று சூழ்ச்சி செய்கின்றனர். விசிகவினர் தோழமைக் கட்சியினர் போட்டியிடும் வேட்பாளருக்கு அவரவர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். 

ஸ்டாலின் சாதனை தொடர வேண்டும். அதற்கு அவர் ஆட்சி அமைய வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: விஜய் கூட கூட்டணி வைத்திருக்கக்கூடாதா? - ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த திருமாவளவன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share