திருமாவளவனை மேடையில் அசிங்கப்படுத்திய பிரேமலதா!! விசிக கொந்தளிப்பு!! தவெக பக்கம் திரும்ப திட்டம்!!
கடலூர் பிரசாரக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை: திருமாவளவனை அவமானப்படுத்தியதாக பிரேமலதா மீது வி.சி.க., குற்றச்சாட்டு!
திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தபோது, தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா, வி.சி.க., தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் மேடையில் இருந்தனர்.
அப்போது திருமாவளவன் பேசும்போது, விருத்தாசலம் தொகுதி வேட்பாளர் என்று பிரேமலதாவை அறிமுகப்படுத்தினார். ஆனால் பிரேமலதா எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தியபோது மட்டும் எழுந்து கூட்டத்தினரைப் பார்த்து கும்பிட்டார். இந்தச் சம்பவம் வி.சி.க.,வினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வி.சி.க., நிர்வாகிகள் கூறுகையில், “பிரேமலதா ஒரு கட்சித் தலைவராக இருந்தாலும், தேர்தல் அரசியலில் புதியவர். திருமாவளவன் அறிமுகப்படுத்தும்போது குறைந்தபட்சம் கும்பிட்டிருக்கலாம். மேடை நாகரிகம் இல்லாமல், திருமாவளவனை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார். இதற்கு முன்பும் திமுக பொதுச்செயலர் துரைமுருகன் பிரசாரத்தில் வி.சி.க., நிர்வாகி அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: மாற்று வேட்பாளராக மனைவியை நிறுத்தியது ஏன்? கட்சியில் வேறு யாருமில்லையா? சீமான் மாஸ் பதில்!
மேலும் பல இடங்களில் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே வி.சி.க.,வினரை பிரசாரத்துக்கு அழைக்கின்றனர். மற்ற சமூக மக்கள் வசிக்கும் இடங்களில் எங்களை அழைப்பதில்லை. திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஜாதி பாகுபாட்டுடன் நடந்து கொள்கின்றனர். இது குறித்து கட்சி தலைமைக்கும் தெரிவித்துள்ளோம்” என்று கூறினர்.
ஏற்கனவே பெரும்பாலான தலித் இளைஞர்களின் ஓட்டுகள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு (த.வெ.க.,) செல்லும் சூழல் உருவாகியுள்ளதாகவும், கூட்டணி கட்சிகளின் இத்தகைய செயல்பாடுகள் தங்களையும் யோசிக்க வைப்பதாகவும் வி.சி.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கடலூர் பொதுக்கூட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேமலதா மீது ஜாதி பாகுபாடு காட்டியதாக வி.சி.க.,வினர் கடுமையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தி திமுகவுக்கு பெரும் தலைவலியாக மாறும் அபாயம் உள்ளது.
தமிழக அரசியலில் ஜாதி அரசியல் எப்போதும் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், இந்தச் சர்ச்சை இன்னும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: என்மீது கொலைவெறியில் இருக்கிறார் இபிஎஸ்!! பதவிகளை விட்டு கொடுத்தது துரோகமா? செங்கோட்டையன் கேள்வி!