×
 

மம்தா அணியின் அதிரடி வழக்கு! திரிணாமுல் காங்கிரசுக்கு மீண்டும் அதிர்ச்சி! உச்ச நீதிமன்ற நோட்டீஸால் பரபரப்பு!

நீண்ட காலமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அபிஷேக் பானர்ஜி உச்ச நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் பிளவு தற்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. வேறு கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படும் 20 எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி முதல்வராக உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 50க்கும் மேற்பட்டோர் தனி அணியாக பிரிந்ததாக கூறப்படுகிறது. எண்ணிக்கை அடிப்படையில் அந்த அணியை சட்டமன்ற எதிர்க்கட்சியாக சபாநாயகர் அங்கீகரித்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது.

இதற்கிடையே, நாடாளுமன்றத்திலும் திரிணாமுல் காங்கிரசுக்கு பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கட்சியின் 20 எம்.பி.க்கள் கட்சியிலிருந்து விலகி, என்சிபிஐ என்ற பிராந்திய கட்சியில் இணைந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர். அவர்களின் முடிவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அங்கீகரித்ததாகவும், என்டிஏ எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தவெக உடன் கூட்டணியா? காங்கிரசில் இணைப்பா? ஜி.கே.வாசன் அடுத்த அதிரடி முடிவு? யாருக்கு பச்சைக்கொடி?

இதையடுத்து, கட்சி மாறியதாக கூறப்படும் எம்.பி.க்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் மக்களவை சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி, இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகரை நேரில் சந்தித்தும் நடவடிக்கை கோரியதாக கூறப்படுகிறது.

ஆனால், நீண்ட காலமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அபிஷேக் பானர்ஜி உச்ச நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட 20 எம்.பி.க்களுக்கும் தங்களது நிலைப்பாட்டை விளக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அதேநேரத்தில், மக்களவை சபாநாயகர் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உள்ள பதவி என்பதால், அவருக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனால், 20 எம்.பி.க்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான விவகாரம் அடுத்தகட்டத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கூட்டணி மூலம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் நிலை... கிருஷ்ணகிரியில் ஜி கே வாசன் பேட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share