×
 

''ஊமையா நாங்க..!!'' - கொந்தளித்த செந்தில் பாலாஜி Vs சீறி எழுந்த சிடிஆர்... பேரவையில் காரசார விவாதம்...!

கடந்த இரண்டு மாதங்களாக சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் இணைப்புகளை நாம் மறுமதிப்பீடு செய்து கொண்டிருக்கிறோம் என்று அவர் சொல்லியிருந்தார்.

சட்டப்பேரவையில் இன்று மானியக்கோரிக்கை விவாதத்தின் போது முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், இந்நாள் மின் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாருக்கும் இடையே காரசார விவாதம் வெடித்தது. 

பேரவையில் செந்தில் பாலாஜி பேசியதாவது: இன்று சில முக்கியமான நிகழ்வுகளை இந்தப் பேரவையின் மூலமாக மாண்புமிகு அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு வருவதில், குறிப்பாக கடந்த மூன்று மாதங்களில், குறிப்பாக இந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் மின் கணக்கீடு என்ற முறையில் எடுக்கப்பட்ட அந்தக் கணக்கீட்டின் அடிப்படையில், லட்சக்கணக்கான மின்நுகர்வோர் தங்களுடைய மின் கட்டணம் உயர்ந்திருக்கிறது என்ற குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள்.

கடந்த இரண்டு மாதங்களாக சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் இணைப்புகளை நாம் மறுமதிப்பீடு செய்து கொண்டிருக்கிறோம் என்று அவர் சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி தலையில் இறங்கியது இடி... உதவியாளர் வீட்டிற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை...!

இது குறித்து சமூக வலைதளங்களில் சிலவற்றைப் பார்த்தபோது, நிறைய இடங்களில் அதிகப்படியாக மின் கட்டணம் வந்துள்ளது என்று பதிவுகள் வந்திருந்தன. அதற்குப் பிறகு இது என்ன என்று விசாரிக்க வேண்டும். ஏனென்றால், பொதுவெளியில் இது தொடர்பான புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன என்று சொல்லிவிட்டு, மின்சார வாரியம் தானாக முன்வந்து, கடந்த ஆண்டுக்கும் அதற்கு முந்தைய ஆண்டுக்கும் இடையிலான கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்த்து, தானாக முன்வந்து சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் இணைப்புகளை மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்தது.

இதற்கு பதிலளித்த  மின் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு, நான்கு மடங்கு அதிகமாக கட்டணம் வந்துள்ள இணைப்புகளைத் தானாக முன்வந்து மறுமதிப்பீடு செய்யலாம் என்று முடிவு செய்து, சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் இணைப்புகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும். அது சம்பந்தப்பட்ட சுற்றறிக்கைதான் அவர் குறிப்பிட்ட சுற்றறிக்கை.

அது தானாக முன்வந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை. அது குறித்து திமுக தலைவர் புகார் வந்ததன் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சொன்னால், அதைத்தான் நான் தெளிவுபடுத்தியிருந்தேன். 3 லட்சத்து 70 ஆயிரம் புகார்கள் வந்ததாகக் கூறவில்லை. மின்சார வாரியம் தானாக முன்வந்து அந்த மறுமதிப்பீட்டை மேற்கொண்டது.

அந்த மறுமதிப்பீட்டின் அடிப்படையில் கடைசியாகப் பார்த்தீர்கள் என்றால், சுமார் 2,719 இணைப்புகளில் மட்டும்தான் மாறுபாடு இருந்தது. 3 லட்சத்து 70 ஆயிரம் இணைப்புகளுக்கான மறுமதிப்பீட்டை முழுமையாக முடித்தபோது, 2,719 இணைப்புகளில் மட்டுமே மாறுபாடு இருந்தது.

அதுவும் எதனால் என்று பார்த்தீர்கள் என்றால், 1,350 இணைப்புகளில் மீட்டர் பழுதாக இருந்தது. 1,369 இணைப்புகளில் தவறான மீட்டர் ரீடிங் பதிவாகியிருந்தது. அங்கு நேரடியாகச் சென்று கைமுறையாக எடுக்கப்படும் மீட்டர் ரீடிங்கில் ஏற்படும் தவறுகள்தான் அவை.

இது எல்லா காலகட்டங்களிலும் 5 முதல் 6 சதவீதம் வரை நடக்கக்கூடிய விஷயங்கள்தான். ஆனால், ஏன் இவ்வளவு மாறுபாட்டை மக்கள் பார்க்கிறார்கள் என்று மீண்டும் மறுமதிப்பீடு செய்தபோது, கடந்த மாதங்களில் "டேபிள் ரீடிங்" என்ற ஒன்றை அவர்கள் பின்பற்றி வந்திருப்பது தெரியவந்தது.

அந்த டேபிள் ரீடிங் என்றால் என்ன என்று பார்த்தீர்கள் என்றால், நேரடியாகச் சென்று கணக்கீடு செய்யாமல், அங்கேயே உட்கார்ந்து முந்தைய மீட்டர் ரீடிங்கைப் பதிவு செய்யும் வழக்கம் பல காலங்களாக இருந்து வந்திருக்கிறது.

தேர்தல் நடைபெற்ற அந்த மாதங்களில், அதாவது ஏப்ரல் மாதங்களில், அவர்கள் நேரடியாகச் சென்று கணக்கீடு எடுக்காமல், முந்தைய ரீடிங்கை பல இடங்களில், பெரும்பாலான இடங்களில் பதிவு செய்துள்ளனர். அதாவது, ஜனவரி மாதம் எவ்வளவு பயன்பாடு இருந்ததோ, என்ன ரீடிங் எடுக்கப்பட்டிருந்ததோ, அதையே பதிவு செய்து வைத்துள்ளனர்.

நம்முடைய ஆட்சி வந்த பிறகு, அனைத்து இடங்களிலும் கண்டிப்பாக நேரடியாகச் சென்று ரீடிங் எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து இணைப்புகளையும் கணக்கீடு செய்யும்போது, நேரடியாகச் சென்று ரீடிங் எடுக்கும் பட்சத்தில், கடந்த நான்கு மாதங்களுக்குள் பதிவாகியிருந்த ரீடிங்குகள் மொத்தமாக வரும்போது, நிறைய இடங்களில் இந்த மாறுபாடு ஏற்பட்டுள்ளது.

அதுதான் முக்கியமான காரணம். இந்த மறுமதிப்பீடுகள் அனைத்தும் முழுமையாக முடிந்த பிறகு, பெரிய அளவில் எந்தவிதமான மாறுபாடும் இல்லை.

அதற்கான காரணத்தைப் பார்த்தால், முந்தைய காலங்களில் சரியாக நேரடியாகச் சென்று ரீடிங் எடுக்காமல், "டேபிள் ரீடிங்" என்ற பெயரில் முந்தைய ரீடிங்கைப் பதிவு செய்ததுதான் காரணம்.

இதை வருங்காலங்களில் கண்டிப்பாக நேரடியாகச் சென்று எடுக்க வேண்டும். அதிலும் புளூடூத் வழியாக மொபைல் மூலம் ரீடிங் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஏற்கனவே அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். 

இதையும் படிங்க: #BREAKING செந்தில் பாலாஜிக்கு கிடுக்குப்பிடி... டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சகோதரருக்கு லுக்அவுட் நோட்டீஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share