விரைவில் வெளியாகிறது தேர்தல் அறிக்கை!! யாராலும் நிறுத்த முடியாது! திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் ஃப்யர்!!
திமுக அரசின் திட்டங்களை காப்பியடித்து அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன என திருச்சியில் நடந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திருச்சி, மார்ச் 9: திமுகவின் 12-வது மாநில மாநாடு சிறுகனூரில் பிரமாண்ட அளவில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மேடையேறி உரையாற்றினார். “திரும்பும் திசையெல்லாம் அண்ணாவின் தம்பிகள்! தமிழகமே திருச்சியில் திரண்டுள்ளது. உங்கள் அன்புதான் என்னை இளமையாக வைத்திருக்கிறது. உங்கள் உற்சாகம் என் வயதை குறைத்துவிட்டது” என்று உணர்ச்சிப் பொங்கத் தொடங்கினார்.
“தமிழகத்தின் முதல்வரானதற்கு காரணம் நீங்கள் தான். உங்களால் உயர்ந்தேன், உங்களால் வாழ்கிறேன். 200 ஏக்கர் நிலத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு. இனிமேல் நாம் அடித்து ஆட வேண்டும். ஸ்டாலின் தொடரட்டும் என்பது எனக்கான முழக்கம் அல்ல. திராவிடம், திமுக தொடரட்டும் என்பதற்கானது” என்று வலியுறுத்தினார்.
திமுக 70 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வருவதை நினைவுகூர்ந்த ஸ்டாலின், “அண்ணாதுரை முதல் மாநில கட்சியாக ஆட்சி அமைத்தார். கருணாநிதி 5 முறை ஆட்சி செய்தார். என் தலைமையில் 6-வது முறை ஆட்சிக்கு வந்தோம். இனிமேல் 7-வது முறை மட்டுமல்ல, என்னாளும் திமுக தான் ஆட்சி செய்ய வேண்டும். இது நமது கடமை” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு நம்மை நம்பித்தான் உள்ளது!! நாமும் தமிழ்நாட்டை நம்பித்தான் உள்ளோம்!! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!
“தமிழகம் நம்மை நம்பியுள்ளது, நாமும் தமிழகத்தை நம்பியுள்ளோம். திமுக ஆட்சி தொடர வேண்டும். 2021 திருச்சி மாநாட்டில் அறிவித்த 7 இலக்குகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றி விட்டோம். மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். எதிர்க்கட்சிகள் மனதில் ஒப்புக்கொள்வார்கள். மத்திய பாஜக அரசு கூட தமிழகம் முதல் மாநிலம் என்கிறது. உலக பத்திரிகைகள் சூப்பர் ஸ்டார் மாநிலம் என்கின்றன. 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளோம்” என்று பெருமிதம் தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கை குறித்து பேசிய ஸ்டாலின், “விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளோம். மற்ற அரசியல் கட்சிகள் இன்ஸ்டால்மென்டில் அறிக்கை வெளியிடுகின்றன. நாம் நிறைவேற்றிய திட்டங்களை காப்பியடித்து அறிவிக்கின்றனர். அவர்களுக்கு வழியில்லை. நமது திட்டங்களை யாராலும் நிறுத்த முடியாது. அவர்களின் அறிக்கைக்கு கன்டென்ட் கொடுப்பது ஸ்டாலின் திட்டம்தான். இந்த திட்டம் இருக்கும் வரை தமிழகத்தை ஸ்டாலின் தான் ஆட்சி செய்வான்” என்று கடுமையாக விமர்சித்தார்.
மகளிர் உரிமைத்தொகை, காலை உணவு திட்டம், வீடு தேடி ரேசன், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களை யாராலும் நிறுத்த முடியாது என்றும், நிறுத்தினால் மக்கள் விரட்டிவிடுவார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். மாநாடு முழுவதும் தொண்டர்களின் ஆரவாரம், முழக்கங்கள் என பிரமாண்ட காட்சியாக இருந்தது. திமுகவின் வெற்றி உறுதியை மீண்டும் வெளிப்படுத்திய மாநாடாக இது அமைந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு நம்மை நம்பித்தான் உள்ளது!! நாமும் தமிழ்நாட்டை நம்பித்தான் உள்ளோம்!! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!