மறுபடியும் ஓட்டு கேட்டு வர்றீங்களா?... மரகதம் குமரவேலை விரட்டியடித்த மக்கள்... தவெகவுக்கு பின்னடைவு...!
வாக்கு வாங்கி சென்று நன்றி கூட கூற வரவில்லை இந் நிலையில் மீண்டும் வாக்கு கேட்க வருகிறாயா என கேள்வி எழுப்பினர்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற தமிழக வெற்றிக்காக வேட்பாளர் மரகத குமரவேல், கிராமத்தினர் வெளியேற்றம்
வாக்கு வாங்கி சென்று நன்றி கூட கூற வரவில்லை இந் நிலையில் மீண்டும் வாக்கு கேட்க வருகிறாயா என கேள்வி எழுப்பினர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தனி தொகுதிக்கு உட்பட்ட குன்னத்தூர் தச்சூர் கீழ்பட்டு காவாலூர் தேவத்தூர் ஆகிய பகுதிகளில் இன்று மூன்றாவது நாளாக தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் மரகதம் குமரவேல் அவர்கள் தனது பிரச்சாரம் செய்தார்.
அப்பொழுது வீராண குண்ணம் பகுதியில் இன்றுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்கு கட்சித் தொண்டர் உடன் சென்ற அவரை அங்கிருந்த கிராம மக்கள் தடுத்து நிறுத்தி உங்களுக்கு நாங்கள் அழைப்பு கொடுக்கவில்லை ஏன் வந்தீர்கள்? என தனித்து நிறுத்தினர்.
இதையும் படிங்க: வெற்றிக்கனி யாருக்கு.? விறுவிறு இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்பு மனுத் தாக்கல்..!!
மேலும் கடந்த தேர்தலில் வாக்கு கேட்டு வெற்றி பெற்ற சென்று நீங்கள் அதற்காக நன்றி கூட கூற வராமல் மீண்டும் வாக்கு கேட்க வருகிறாயா என கேள்வி எழுப்பினர். மேலும் பல பகுதிக்குச் சென்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் அவர்களை கிராம மக்கள் தண்ணீர் பிரச்சினை 100 நாள் வேலையில் கூலி பிரச்சனைஎன்ன பல்வேறு பிரச்சனைகள் வேட்பாளரிடம் எழுப்பப்பட்டன.
இதேபோல் அவர் செல்லும் கிராமங்களில் பல கிராமங்களில் தொடர்கிறது ஆகவே இன்று மூன்றாவது நாளாக சுமார் 20 காவல் துறையினருடன் பாதுகாப்புடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்
இதையும் படிங்க: மாத்தியாச்சு..! "கனிமொழி ராஜாத்தி கருணாநிதி"..! தாய் பெயரை சேர்த்த நெகிழ்ச்சி சம்பவம்..!!