×
 

ஆட்சி கவிழ்ப்பு முயற்சியா..? கோடிக்கணக்கில் பேரம்... செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அதிரடி ARREST..!

தவெக MLA விடம் பேரம் பேசியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து “குதிரை பேரம்” என்பது அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. மாற்றுக் கட்சியினரை தமிழக வெற்றிக் கழகத்தினர் விளக்கு வாங்குவதாக பெரும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ-வை பேரம் பேசியதாக புகார் எழுந்துள்ளது.

தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைய வேண்டும் என்று பேரம் பேசியதாக தெரிகிறது. தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை கவிழ்க்க பல கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊத்தங்கரை தமிழக வெற்றி கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் நடத்திய புகாரின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

திருநாவுக்கரசு அளித்த தகவலின் பெயரில் கரூரைச் சேர்ந்த இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. கார்த்திக், அதிபன் ரமேஷ், திருநாவுக்கரசு உட்பட நான்கு பேர் கைதாகி உள்ளனர். கரூரில் கைது செய்யப்பட்ட இருவரின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: அணுக் கனிம சுரங்கத்துக்கு அனுமதி நீட்டிப்பா..? விளைவு மோசமா இருக்கும்..! TTV தினகரன் கொந்தளிப்பு..!

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை கவிழ்க்க திமுக முயன்று வருவதாக நேற்று அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டி இருந்த நிலையில் தற்போது நிகழ்ந்திருக்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிங்க: அரசியலின் அடுத்தடுத்த திருப்பங்கள்..! நாளை முதல் தவெக..! C.விஜயபாஸ்கரின் புதிய ரூட்... முக்கிய அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share