வீரியமெடுக்கும் ஆட்சி கவிழ்ப்பு பிரச்சனை..! 6 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்... ரகசிய இடத்தில் விசாரணை..!
ஆட்சிக்கமைப்பு விவகாரத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக வெற்றி கழக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்காக கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்ட விவகாரம் சூடு பிடித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து “குதிரை பேரம்” என்பது அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. மாற்றுக் கட்சியினரை தமிழக வெற்றிக் கழகத்தினர் விளக்கு வாங்குவதாக பெரும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ-வை பேரம் பேசியதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைய வேண்டும் என்று பேரம் பேசியதாக தெரிகிறது. பேரம் பேசியதாக செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இரண்டு பேர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஆட்சிக் கவிழ்ப்பு விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் ஆறு பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த இருப்பதாக கூறப்பட்டது. தற்போது ஆறு பேரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு அசிங்கமா இல்லையா..? எடப்பாடியும் தான் உடந்தை..! குண்டைத் தூக்கிப் போட்ட அமைச்சர் நிர்மல் குமார்..!
சென்னை மற்றும் கரூரை சேர்ந்த போலீசார் 6 பேரிடமும் விசாரணையை தொடங்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேர் கைதாகி இருந்த நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யார் யார் இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பது குறித்தும் இதற்கு மூளையாக செயல்படுவது யார் என்பது குறித்து விசாரிப்பதற்காகவும் மேலும் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காகவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: “இப்ப தும்முனா சரியா இருக்கும்...” - கூட்டணி கட்சிகளுக்கு கொக்கி போடும் விஜய்... பின்னணி என்ன தெரியுமா?