“போனில் இல்ல நேரில் கூப்பிட்டு தான் எச்சரித்தேன்...” - தவெக நிர்வாகியை மிரட்டியது குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்...!
தான் நேரில் பேசியதை போனில் பேசியதாக எடிட் செய்து தான் பேசாத வாசகங்களும் சேர்த்து ஆடியோ பரவி வருவதாக ஜெகதீஸ்வரி விளக்கம்.
இராஜபாளையம் சமூக நலத்துறை அமைச்சர் த வெ க நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வைரல் ஆடியோ. தான் நேரில் பேசியதை போனில் பேசியதாக எடிட் செய்து தான் பேசாத வாசகங்களும் சேர்த்து ஆடியோ பரவி வருவதாக ஜெகதீஸ்வரி விளக்கம்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தை சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பரவிய ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று சமூக நலத்துறை அமைச்சர் ஆனவர் ஜெகதீஸ்வரி. இவர் தனது கட்சியின் நிர்வாகியை கொன்று விடுவேன் என்று பேசியதாக ஆடியோ ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி, மேற்படி ஆடியோவில் பேசும் ராஜகுரு என்ற நபர் மாற்றுக் கட்சியில் இருந்து தங்கள் கட்சிக்கு வந்ததாகவும் அவர் வந்ததிலிருந்து அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை தொடர்பு கொண்டு டென்டர் சம்பந்தப்பட்ட விஷயங்களை தனக்கு தெரிவிக்காமல் வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று கூறி வந்தார். இதனை அடுத்து தான் ராஜகுருவை நேரில் அழைத்து எச்சரித்து அனுப்பியதாகவும், அதனையடுத்து மாவட்ட செயலாளர் சின்னப்பர் ராஜகுருவை கடந்த 21ஆம் தேதி கட்சியை விட்டு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: வழக்கறிஞர் நியமன சர்ச்சை..! ரூ.12 லட்சம் டீல்... தவெக நிர்வாகியின் அதிர வைக்கும் ஆடியோ..!!
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜகுரு தான் நேரில் அழைத்துப் பேசிய விஷயங்களையும் தான் பேசாத ஒரு சில வார்த்தைகளையும் உருவாக்கி எடிட் செய்து தற்போது பரவ விட்டிருப்பதாகவும் கூறினா
இதையும் படிங்க: வேளச்சேரியில் துப்பாக்கி சூடுதல் போட்டி..! குறிப்பார்த்த அமைச்சர் ஆதவ்..! இளம் வீரர்கள் உற்சாகம்..!!