“அவர்களுக்கு பழக்கம் எங்களுக்கு வழக்கம்...” - ரைமிங்காக பேசி பாஜகவை விளாசிய நாஞ்சில் சம்பத்...!
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கையை நிறுத்தி வைத்திருப்பது பாஜகவின் வக்கிரமான அரசியல் என நாஞ்சில் சம்பத் ஆவேசம்
தலைவர் விஜய் திமுகவிற்கு சவாலாக இருப்பார். தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலை தவெகவிற்கு சாதகமாக உள்ளது. அண்ணா, எம்ஜிஆர் வரிசையில் விஜய் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும். என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை புழல் அடுத்த ரெட்டேரியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற கொள்கை விளக்க தெருமுனை கூட்டத்தில் அக்கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், தமிழ்நாட்டு அரசியல் கொதி நிலைக்கு வந்துள்ளது எனவும், தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலை தவெகவிற்கு சாதகமாக உள்ளதாக கூறினார்.
தேர்தலுக்கு ஒத்திகை பார்ப்பது போல திருச்சியில் திமுக நடத்திய மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என கூறிய நிலையில், 10ஆயிரம் பேர் கூட பங்கேற்கவில்லை எனவும், 1 மணி நேரத்தில் ஒரு மாநாடு முடிந்து விட்டது எனவும், திமுக தனது முடிவுரையை தானே எழுதி வருகிறது எனவும் விமர்சித்தார். திமுக அதன் இருப்பை இழந்து விட்டதாகவும், திமுக எதிர்காலத்தில் ஆட்சி வரும் என்பதை தவிர, கட்டமைப்பாக கட்சியாக கூட நடத்த வாய்ப்பில்லை என்றும் கருத்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லி போய் அமித் ஷா காலை...எடப்பாடி பழனிசாமியை விளாசித் தள்ளிய நாஞ்சில் சம்பத்...!
தலைவர் விஜய் திமுகவிற்கு சவாலாக இருப்பார் எனவும், 1967ல் அண்ணா, 1977ல் எம்ஜிஆர் போல தற்போது தலைவர் விஜய் மூலம் ஆட்சி மாற்றம் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார். தவெகவிற்கு சிபிஐ மூலம் பாஜக நெருக்கடி அளிப்பதாக வரும் புகார் குறித்த கேள்விக்கு, நெருக்கடி கொடுப்பது அவர்களது பழக்கம் எனவும், அதனை எதிர்கொள்வது எங்களுக்கு வழக்கம் என கூறினார்.
கூட்டணிக்குள் வரவைப்பதற்காக நெருக்கடியா என்ற கேள்விக்கு, ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கையை நிறுத்தி வைத்திருப்பது பாஜகவின் வக்கிரமான அரசியல் என்றும், பராசக்திக்கு அனுமதி கொடுத்து விட்டு ஜனநாயகனுக்கு கொடுக்கவில்லை எனவும், அதனை மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர் எனவும், நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் தலைவர் விஜய்க்கு உள்ளது என கூறினார்.
இதையும் படிங்க: மம்தா சேலையயை கடன் வாங்கிக் கட்டிக்கோங்க ஸ்டாலின்... நாஞ்சில் சம்பத் விளாசல்....!