தவெக துண்டால் முகத்தை மூடி ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறிய இளைஞர்கள்... விஜய் பரப்புரையில் பரபரப்பு..!!
பெரம்பூரில் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது தவெக துண்டு அணிந்த சில இளைஞர்கள் டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளார். சென்னை பெரம்பூர் தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து, அதன் பின்னர் அங்கேயே தனது தேர்தல் பரப்புரையை உற்சாகமாகத் தொடங்கினார். இந்த நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் இன்று அறிவிக்கப்பட்டதிலிருந்து தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இன்று பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்த விஜய், அதன் பின்னர் தவெகவின் தேர்தல் பணிமனைக்குச் சென்றார். அங்கிருந்து பரப்புரை நிகழ்ச்சிக்கு நகர்ந்தார். பெரம்பூர் முழுவதும் விஜய்யின் வருகையை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்களும், ஆதரவாளர்களும் திரண்டனர்.
தெருக்கள் முழுவதும் கொடிகளும், பதாகைகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. விஜய் வந்தபோது, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முழக்கமிட்டு, பெரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை பார்ப்பதற்காக ஆர்வத்தோடு காத்திருந்தனர். பல்வேறு கட்டடங்கள் மற்றும் உயரமான இடங்களில் நின்று விஜயை பார்க்க காத்திருந்தனர். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் துண்டு அணிந்த சில இளைஞர்கள் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி விஜய் பார்க்க நின்றுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING: என் நெஞ்சில் குடியிருக்கும் பெரம்பூர் தொகுதி மக்களே..!! மாஸாக பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்..!!
அவர்களை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கீழே இறங்க வைத்தனர். சில இளைஞர்கள் தமிழக வெற்றிக்கழக துண்டை அணிந்து சென்ற நிலையில் ஒரு சில இளைஞர்கள் துண்டால் முகத்தை மூடிக்கொண்டு அங்கிருந்து ஓடினர்.
இதையும் படிங்க: #BREAKING: சும்மா அதிருது- ல..! பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்..! உற்சாக வரவேற்பு..!!