களமிறங்கும் விஜய்..!! தவெக வேட்பாளர் நேர்காணல்...!! பனையூருக்கு படையெடுக்கும் நிர்வாகிகள்..!
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் விஜய் இன்று நேர்காணல் நடத்துகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பியவர்கள் அளித்த விருப்ப மனுக்களை அடிப்படையாகக் கொண்டு, உத்தேசமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கான நேர்காணல் இன்று தொடங்கியுள்ளது. கட்சியின் தலைவர் தளபதி விஜய் தானே நேரடியாக இந்த நேர்காணலை நடத்துகிறார்.
இந்நிகழ்வு சென்னை புறநகர்ப் பகுதியான பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.கடந்த பிப்ரவரி மாதத்தில் தவெக சார்பில் சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. பிப்ரவரி 6 முதல் 14 வரை விருப்ப மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அப்போது கட்சியினர் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்பட்டது. பலர் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் மனுக்களைப் பெற்று சமர்ப்பித்தனர்.
இதன்மூலம் கட்சி அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டது. விருப்ப மனுக்கள் பெறப்பட்ட பின்னர், அவற்றை ஆய்வு செய்து உத்தேச வேட்பாளர்கள் பட்டியலைத் தயாரிக்கும் பணி நடைபெற்றது. ஒவ்வொரு தொகுதிக்கும் பலர் பரிசீலிக்கப்பட்டு, சிலர் குறுகிய பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இன்று தொடங்கியுள்ள நேர்காணல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இதையும் படிங்க: கரூர் துயரம்... என்ன நடந்துச்சு? சிபிஐ விசாரணைக்கு மார்ச் 17ல் ஆஜராகுவதாக செந்தில் பாலாஜி விளக்கம்..!!
விஜய் தலைமையில் நடைபெறும் இந்தச் செயல்முறை, பணம் அல்லது பிற செல்வாக்குகளுக்கு அப்பாற்பட்டு, தகுதி, அர்ப்பணிப்பு, மக்களுக்கான சேவை மனப்பான்மை ஆகியவற்றின் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கத்துடன் அமைந்துள்ளது. இதனால் கட்சியில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளும், உத்தேச வேட்பாளர்களும் பனையூர் அலுவலகத்திற்கு வருகை தரத் தொடங்கியுள்ளனர். அலுவலகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பலர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!